Friday, August 22, 2014

செக்ஸ் பற்றிய ஒரு புலம்பல்…


நான் தப்பா எதனா பேசினா மன்னிச்சுருங்க. நீ பேசுறது பூராவும் தப்புதான்  மைண்ட் வாய்ஸ் என் கட்டுரையின் இடையில் கேட்கும். சொ மன்னிச்சுருங்க.( சோ நெடில் அல்ல சொ குறில்) இது இலக்கணமும் அல்ல ஒரு ஷோவின் பாதிப்பு.

    சரி கிளுகிளுப்பான டாப்பிக் எடுத்துட்டு மொக்கையை போட விரும்பல. உண்மையிலே "மேட்டருக்கு" வருவோம். யாரு சொன்னா செக்ஸ்ன்னா நாலு சுவருக்குள்ளதான்னு? ஐ மீன் பேசறதுக்கு கூட. யாரு அந்த மகான்? நம்ம கலாச்சாரம் என்னா உள்ளுக்குள்ள என்ன வேணும்னாலும் பண்ணலாம் ஆனா எல்லோர் முன்னாடியும் பேசினா  "பிடிச்சி ஜெயில்ல போடுங்க சார் செக்ஸ் பற்றி பேசுவானாம்" என்பதுதான்.முடிந்தவரை அதை இயல்பாக அணுகப்பாருங்க. அது ஒன்றும் கொலைக்குற்றம் அல்ல கொலைக்குள்ளாக தூண்டும் ஓர் உணர்வு யாரும் தப்பமுடியாது. எனக்கு அப்படியெல்லாம் இல்லையென்று சொன்னா அது பொய் சொ ரொம்ப மெனக்கிடாதீங்க.

  நான் மாத்ருபூதம் ஷோ பார்த்தேன் பழசுதான் ஒரு லெட்டெர்ல "டாக்டர் என் நண்பனுக்கு அவனோட பிறப்பு உறுப்பு மாறிட்டு வருது இது என்ன நோய்" அதுக்கு அவர், இவருக்குத்தான் அந்த பிரச்சனை இவர் என்ன நண்பன் குளிக்கும் போது எட்டிப்பார்த்தாரா? என்றார். இது உனக்கு தேவையா? எப்பதான் பாஸ் எல்லாரும் திருந்துவீங்க? . இப்படித்தான் குஷ்பு "கல்யாணத்திற்கு முன் உறவு வச்சுக்கலாம்ன்னு" சொன்னதிற்கு உடனே எல்லோரும் கிளம்பி வந்துட்டாங்க எதிர்க்க "அதெப்படி நடப்பதையெல்லாம் நீ வெளியே சொல்லலாம்".

  இதுல என்ன உச்சகட்டம்ன்னா இதோட தாக்கமாக கணவன், மனைவி கூட இதைப்பற்றி பேசிக்கிறதில்லை என்பதுதான். அதுலையும் என்ன சோகமான விஷயம்னா அது வெளியே சொல்லமுடியாத பிரச்சனையாம் . வெளியே சொல்றதில்லை என்பதினால்தான் பிரச்சனையே. உங்க கலாச்சார புத்தகத்தில இருந்து இந்த ஏடை கொஞ்சம் கிழிங்க ப்ளிஸ்  கெஞ்சிக்கேட்டுகிறேன்.

                   " காதலில் விழுந்தவுடன் காமத்தில்
                            தோய்ந்துவிடுங்கள்
                       அதுவே காதலிக்க சிறந்த வழி "

இது வேறுயாரோட கவிதையும் இல்லை. என்னோட சொந்த சரக்குதான். அதுனால காதலை சொல்லுங்க. .என் ப்ரெண்ட்ஸ்கிட்ட பேசிட்டுயிருக்கப்ப ஏதோ டாபிக்ல நான் சொன்னேன் "இந்தியாவுல இன்னும் ப்ரீசெக்ஸ் வரலன்னு" உடனே ஒரு மயான அமைதி நான் என்னவோ ஒரு மரண செய்தியை சொன்னா மாதிரி.

 அதைப்பற்றி பேசியும், சகஜமாய் அணுகினாலும் ரேப் கொஞ்சம் குறைய வாய்ப்பிருக்கு. அதை லென்ஸ் வைச்சு பார்த்தா அப்படித்தான் தெரியும். ஜஸ்ட் கூலர்ஸ் போடுற மாதிரி அதை அணுகுங்க.

                "கலவியில் சொல்லாத காதலை
                   எதில் சொல்வார்கள் சிலர்?"

 இது என்னோட ட்வீட்தான். சொ பேசுங்க முதல்ல. அது என்ன யாருக்கும் இல்லாத அக்கறை உனக்கு அப்படின்னுதானே கேட்குறீங்க.. நானே பாதிக்கப்பட்டேன் நேடியாய் பாதிக்கப்பட்டேன். அதனால, அட்லீஸ்ட் கணவன், மனைவியாவது இயல்பா பேசுங்க பிரச்சனைகள் குறையும். ஆமேன்.


Tuesday, August 5, 2014

கீச்சுகளின் தொகுப்பு...

இந்தச் சிறுகல் விழுவதற்கு முன் எங்கே ஒளிந்திருந்தன இத்தனை வட்டங்கள், இக்குளத்தினில்?

பிடித்தவரிடம் அன்பை காட்டாமல் அடக்கி வைப்பதிற்கு பதில் இறந்து விடலாம் போலும்..#கஷ்டம்
முத்தம்=இதன் பெருமை என்னவென்றால்.. -- உடலின் எல்லாப் பகுதிகளிலும்,எல்லாமே செய்ய முடியாது! முத்தம்= உடலின் எல்லாப் பகுதிகளிலும் இயலும்:)

தனிமையும் சில சமயங்களில் விரும்பப்படுகிறது..

பொதுவா சொல்ற டயலாக் "நேரம் இல்ல " ஆனா அதெல்லாம் சும்மா..மனசு இல்ல..

மன்னிக்க முடியாத தவறு...தவறு செய்யாமலே இருப்பது.

காமத்தை ஏமாற்றி காதலை அடைய முயற்சிப்பவர்கள் தயவு செய்து பிரேக்அப் செய்து கொள்ளுங்கள்.

காமம் உடம்பைப் பிழிகிறது!! காதல் உயிரைப் பிழிகிறது!!

கலவியில் சொல்ல முடியாத காதலை, எதில் சொல்வார்கள் சிலர்?

நினைவில்லை என்று சிலவற்றை நினைவுபடுத்தியப்படியே கடந்து விட நேர்ந்து விடுகிறது!

மனதின் பாரத்திற்கு மட்டும் எடை இருந்திருந்தால், பூமிக்கு மேலே எந்த மனிதனும் இருந்திருக்க முடியாது!

எல்லோருக்கும் வரும், நரகத்திலிருந்து மீட்டுச் செல்ல ஒரு மரணம்.

@withkaran: டிவி,ப்ரிட்ஜ்,வாஷிங்மெஷின் மாதிரி இன்ஜினியரிங் படிச்ச வாரிசு ஒன்னு இப்ப எல்லா வீட்டுலயும் இருக்கு..

அழகான ஆண், முட்டாளாய் இருந்தால், பெண் ஏமாற்றம் அடைகிறாள். அழகான பெண், புத்திசாலியாகவும் இருந்தால், ஆண் ஏமாற்றம் அடைகிறான்.

நான்கு இதழ்கள் இணையும் போது மூக்கு முட்டுகிறதா என்று தெரியவில்லை ஆனால் மூச்சு முட்டுகிறது.

மேட்ரிமோனி வெப்சைட் எல்லாம் ஓபன் பண்ணினா. . . கூடவே போட்டஷாப் அப்ளிகேஷன் விளம்பரமா வருது. . நல்ல டிசைன்

மிதந்து செல்லும் இறகு போல் இலகுவாதல், உன்னிடம் மட்டும் சாத்தியம்...

ஏரியும் தீயில், பனியாய் உருக வைக்கும் உணர்வை தருபவர்... நம் வாழ்க்கையில் பாதுகாக்கப்பட வேண்டியவர்..

பெருகும் அன்பை ஓர் முத்தத்தில் அடக்க முயல்வதே முயற்சி...

வெயிலில் நனைந்து, மழையில் காய்ந்தும் போக பழகியவள்.. நீ உடன் இருக்கையில்..

ஈரத்தை, இன்னும் இன்னும் ஈரம் ஆக்கினாய் முத்ததின் வாயிலாக...

உன் கன்னத்தில் தர வேண்டிய முத்தத்தை யாவும் நழுவி இதழ்களில் விழ வைத்ததில் இருக்கிறது உன் திறமை..

தேவைக்கு மீறிய அன்பும் அனர்த்தமாக பார்க்கப்படுகிறது..

கண்ணாடியில் உன் முகம் பார்பதை விட, என் கண்ணகளில் பார் மிகவும் அழகாய் தெரிவாய்..

ஒரு காதலையேனும் சுகிக்காமல் ஒரு துரோகத்தையேனும் அனுபவிக்காமல் ஒரு தோல்வியையேனும் தழுவாமல் அண்டவிடாதீர்கள் மரணத்தை அது பிணமாய் வாழ்ந்த தடம்