Tuesday, February 2, 2016

எல்லாம் (வெ)வல்ல  ஓர் வெள்ளம்

கொஞ்சம் எதிர்ப்பார்த்ததுப்போல் வந்தது மழை ஆனால், கொஞ்சமும் எதிர்ப்பாராமல் வந்தது வெள்ளம். மழைக்கு என்ன இத்தனை ரௌத்திரம் இயற்கை என்ன நம்மைப்போல் சுடு, சொரணை அற்றதா எவ்வுளவு அடித்தாலும் வாங்கிக்கொள்ள ,இலவசங்களை காட்டியவுடன் பல்யிளிக்க.

   எல்லோரும் போல் மழைதான் என்று எதிர்கொள்ள காத்திருந்தேன். ஆனால், எல்லோரையும் போல் என்னையும் அழவைத்து சென்றது. 7 மாத குழந்தையை இரண்டு நாட்கள் கடும் காய்ச்சலில் வைத்திருந்ததை நினைத்தால் இப்பவும் மலைப்பாக இருக்கிறது எப்படி கடந்தேன் என்று . வெளிச்சத்தில் பழகிய நாம் இருள் என்றாலே பயம் கொள்ள வைக்கும் . அதிலும் காய்ச்சலில் குழந்தை, தெர்மோமீட்டர் , விளக்கின் சிறிதளவு வெளிச்சம் சுற்றிலும் தண்ணீர், சிக்னல் இல்லாத போன் எல்லாம் சேர்த்து பற்றவைத்தது பயத்தின் உச்சத்தை.
 

  குழந்தைக்கு பிக்ஸ் ஏதும் வந்தால் வெளியே எடுத்து செல்ல முடியாத சுழல் . கழுத்தளவு தண்ணீர் தெருவில்.  தெருவை கடந்து மட்டும் எங்கு செல்வது ?. எமெர்ஜென்சி கால் செய்யக்கூட சிக்னல் இல்லை.  இருப்புறமும் ரோட் பிளாக் செய்திருந்தார்கள் பெருங்குடி டோல் வரைதான் எல்லை இந்தப்பக்கம் காரப்பாக்கம், நான் இருப்பது தொரைப்பாக்கம்(OMR) . என் கடவுள் நம்பிக்கை என்பது கடவுளும் இருந்துவிட்டு போகட்டும் என்பதுவரைதான். இந்த அசாதாரண சுழல் கடவுளும் இருக்கிறார் என நம்பவைத்தது.
 
 
 என் அபார்ட்மெண்ட் படிகளிலிருந்து பார்க்கிறேன் தெருவில் கடப்போரை மழையின் எச்சமாக சிலர் தன் உடைமைகளை தலையில் சுமந்த படி கடந்தனர். சிலர் தன் அன்றாடங்களை சந்திக்க சமைக்க தேவையான பொருட்களோடு திரும்பிக்கொண்டிருந்தனர் இன்னும் சிலர் இதனை ரசித்தபடி கடந்தனர். வியந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது  இரு இளைஞர்கள் அருகில் இருக்கும் குப்பைகளை கொஞ்சமும் பொருட்படுத்தாமால் செல்பி எடுத்து எனக்கு சிறிது உற்சாகத்தை ஊட்டினார்கள்.
 
 
  இரண்டு கார்கள் இரண்டு டூ வீலர்கள்களை தண்ணீரில் முழ்கி வெளியேறியிருந்தது. முட்டியளவு தண்ணீரில் பேருந்தை நோக்கி நடந்து இறுதியாக எங்கள் சொந்த ஊருக்கு திரும்பினோம். பூவிருந்தமல்லியை கடந்த பின்தான் சிக்னல் கிடைத்தது. திரும்பும் வழியில் சென்னையே சொந்தமாக கொண்டவர்களின் நிலைமையை யோசிக்கலானேன் வெறுமையே பதிலாய் கிடைத்தது .
 
 
   ஊர் சேர்ந்த பின்தான் தொலைக்காட்சியும் , இணையத்தையும் தொடர்புக்கொள்ள முடிந்தது. ட்வீட்டரில் உதவும் கரங்களை அடையாள படுத்திகொண்டிருந்தது ஆர்டி  கரங்கள் . மனிதம் தழைத்த தருணங்கள் . இவ்வுளவு மழை பெய்து கூவத்தையே சுத்தம் செய்ய முடிந்தது மனிதத்தைதான் அடித்துசெல்ல முடியவில்லை . எல்லோரும் சொல்வதுபோல் இது நேச்சர் கேளமிட்டி அல்ல என்பது தெளிவான ஒன்று, ஆனால் , இது ஹீயூமேன் கேளமிட்டியும் அல்ல  இன்ஹீயூமேன் கேளமிட்டி அரசியல்வாதிகள் மனிதர்கள்தானா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. எல்லாம் (வெ )வல்ல ஓர் வெள்ளம் மனிதம் தவிர்த்து.
 
 
பி.கு : நேரம் இன்மையால் மிகவும் தாமதமாக வெளியிட்டுள்ளேன் ..மன்னிக்கவும்