Friday, October 6, 2017

அம்மா இட்லி சாப்பிட்டார்

ஜெயலலிதாவின் மரணம் குறித்த கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்த வண்ணம் இருந்தது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால். அதை மழுங்கடிக்கும் விதமாக பல நாடகங்களும், நடப்புகளும் நடந்தேறியது தமிழ்நாட்டில்.

மரணமே மர்மம்மான முறையில் என்றிருக்கும் பொழுது. பதவியை பங்கு போட ஆட்டங்கள் நிகழ்ந்தன. அதற்குத்தான் மரணமே என்பது வேறு கதை. இவ்வுளவு நாட்கள் வெளியே தெரியாமல் இருந்த இந்த அறிவு ஜீவி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பற்றி தெரியவந்தது ஓர் ஆசுவாசமான அதிருப்தி. ஜெ என்ற பின்பம் மட்டுமே நிலைத்திருந்தது. இப்பொழுது அவரின் பெயரையும், ஆன்மாவையும் வைத்து இவர்கள் அடிக்கும் லூட்டியைப் பார்த்தால் எப்படி இவர்களை  கையாண்டார் ஜெ என்பது வியப்பளிக்கிறது.

செல்லூர் ராஜாவின் தெர்மோக்கோல் ஐடியா.
சண்முகத்தின் அம்மா இட்லி சாப்பிட்டார் என்று சொன்னது பொய் என்ற ஒப்புதல் வாக்கு மூலம்.
டெங்கு கொசுக்கள் ஏசி பஸ்களிலும், ரயில்களிலும் சீட் பிடித்து வருவதாக சொன்ன அரசு அதிகாரிகள்.
மக்கள் வீடுகளில் பயன்படுத்திய சோப்பின் நுரையே நொய்யல் ஆற்றில் வருவதாக சொன்ன தமிழகத்தின் சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் கருப்பணன்.

இப்படிப் போட்டி போட்டுக்கொண்டு தன் திறமையை காட்டும் இவர்களைப் பார்த்தால் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. இதில் ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் தினகரன் குழுமம் ஒருபுறம். உண்மையில் இவர்களை ஒருபுறமாக கொண்டு வைத்துவிட்டு பழனிச்சாமி திறமையே. இதில் மத்திய அரசின் பங்கு மறுபுறம்.

அம்மாவை அடுத்து சின்னம்மா அலை அடிக்க தொடங்கியவுடன் அதை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை மோடியை சேரும். தர்ம யுத்தம் நடத்திய பன்னீருக்கு நீதி (நிதி அமைச்சர், துணை முதல்லமைச்சர்) கிடைத்துவிட்டது. அவர் யுத்தமும் முடிந்துவிட்டது. கோமாளிகளிடம் நாட்டை ஒப்படைத்த நாம் முட்டாள்களா இல்லை முடிவு தெரியாதவர்களா?.