Saturday, May 5, 2018

பிறிதொரு காலம்

உன் எண்ணங்களில் விழுந்து
உன் வண்ணங்களில் கலந்து
உன் வாழ்க்கையில் நிலைக்கலானேன்

பிறிதொரு காலத்தில் உன்னை
பிரிந்த பொழுது
நினைத்துக் கூடப் பார்த்ததில்லை
உன்னைச் சேர்வேனென்று
நினைக்காத காரணத்தினால்
என்னவோ
நினைத்துக் கூட பார்க்க முடியாத எல்லாம்
நடந்தேறிவிட்டது

காலம் ஒரு கொடிய
மிருகம்  அனைத்தையும் விழுங்கி
ஏப்பம் விட்டபடி மெல்ல நகரும்
சற்றும் சலனமில்லாமல்.