Friday, October 9, 2015

மௌன வெளிகள் ...

வேண்டும்


காதல்  திகட்ட காமம் வேண்டும் 


மழை தகிக்க உன் தேகம் வேண்டும் 


இரவா பகலா என்று தெரியாத ஓர் பொழுது வேண்டும் 


மயங்கும் என் மதியை எந்த உன் மடி வேண்டும் 


அணைக்க அணைக்க எரிய வேண்டும் 


விலக விலக அணைக்க வேண்டும் 


வேண்டும் என்பதெல்லாம் வேண்டும் உன்னோடு மட்டும் வேண்டும் ....


தொலைந்துபோதல் 


உன்னிடம் இருந்து மறைவதாய்
நினைத்து தொலைந்துப்போனேன் உன்னில் 


எனை தேடும் முயற்சியில்
மீண்டும் மீண்டும் வீழ்ந்தேன்  


கொஞ்சமும் அயராது ஆனால்
வியர்வையுடன் என்னுடன் தேடினாய் நீயும் 


தோற்றுப்போன அசதியுலும்
உன் வெற்றியில் லயித்திருந்தேன்


விழி மூடி 


என் புலன்களை புணர்ந்து
என்னுள் நுழைந்தாய்


எனை  குழைத்து சந்தனமாய்
பூசிக்கொண்டாய் உன்முழுவதும் 


சப்தங்கள் யாவும் நிசப்தத்ததின்
பாதங்களில் உறங்கிகொண்டிருக்க 


எதை  எத்தனித்தாலும் அதைமுடித்து
என்னை பூர்த்தி செய்திருப்பாய் 


கரைந்துவிட்ட என்னை உன்வியர்வை
துளிவழியே தேடுவேன் 


விழிமூடி உயிர் திறந்திருப்பேன்
எனை தாண்டி என் உயிர் தொட்டிருப்பாய்
உன்  விழி திறந்து 


Thursday, October 1, 2015

கீச்சுகளின் தொடர்ச்சி

இரவை தோண்டி எத்தனை பகலில் புதைத்தாலும் மீண்டும் துளிர்த்துவிடுகிறது.

சேர்வது அறியாமல் திகைத்து நிற்கிறது என் கண்கள் உன் முன்னால்.

விழிப்பதிற்கு முன்பே விடிந்து விடுகிறது இந்த உலகம், அனைத்து விஷயங்களிலும் .

நம்மை முழுமையாக புரிந்து கொள்கின்ற ஆத்மாத்தமான உறவே வாழ்க்கை துணையாய் அமைவதெல்லாம் வரம்.


நாம மதிக்க கூடாதென்று நினைக்கிறவங்கதான் பெரும்பாலும் மதிப்புக்குரிய இடத்தில இருக்காங்க.


My name is happy அப்படின்னு என் குழந்தை துணில இருக்கு டிபால்ட்டா .. #:-)

நிறவெறி தாக்குதல் என்பது , இருளில் பாய்ந்து வரும் ஒளி.

தனிமை என்கிட்ட கொஞ்ச நேரம் பேசினப்ப நான் அதுகிட்ட கொஞ்ச நேரம் அழுதேன்..

பாதரசம் பூசப்பட்ட கண்ணாடிப்போல் மோதுகின்றன உன் பின்பம் என் மேல்.

என் இன்பத்தின் தலைநகரம் அவள்.#மகளதிகாரம்

காற்றில் கைகளை அசைத்து என் உயிரை உருவுகிறாள் #மகளதிகாரம்

தன் நிறமறியா வானவில் அவள் #மகளதிகாரம்

உன்னைவிட அதிகமாய் கட்டி பிடித்து உருளுகிறது உன் நினைவுகள்.

குழந்தை பிறந்த முதல் மூன்று வருடத்தில் தரும் இன்பத்தை வேறு எப்பொழுதும் தரயியலாது.


விருந்தும் மருந்தும் கொஞ்ச நாளைக்குதான் #புதுகல்யானம்


மடியென்றாலே சுகம் அதுவும் அன்னை மடியென்றால் வரம்..

எவ்வுளவு நேரம்தான் பபுள்கம் போல மென்னுகிட்டே இருக்கிறது இந்த வாழ்க்கைய ..

படிச்ச மேனிக்கு தெரிகிறார்கள் சில அறிவாளிகள் ..

ஜென்னலொர கவிதைகள் சில பெண்கள்..பேருந்தில்

கேட்பதும் கொடுப்பதுமாய் முடிந்துவிடுகிறது வாழ்க்கை.

பரிதவிப்பு , பரவசம் இரண்டையும் அடைவது காதல் தரும் காமத்தில்..
                                                    

முட்டாள் தனமான வாழ்க்கைக்கு மரணம் வந்து பாடம் புகட்டுது..

சாய்ந்து அழுவதற்கேனும் நமக்காய் ஒரு தோள் தேவைப்படுகிறது.

நான் எத்தனைக்கும் பொழுது நீ அதனை முடித்திருப்பாய் ...அதுவே புரிதல்

என் அனைத்து தேவைகளும் ஒன்றில் பூர்த்தி ஆவதுப்போல் பிறந்தால் என்மகள். #மகளதிகராம்

சென்னையில் ஒவ்வொரு ஸ்டாப்பிற்கும் டாஸ்மாக் வைத்திருக்கும் அரசாங்கம் கூடிய சீக்கிரத்தில் டோர் டெலிவரி பண்ணாலும் ஆச்சரியபட இல்லை.

விடை இல்லாத வினாக்கள் வாழ்க்கை முழுவதும் இருந்துக்கொண்டே இருக்கிறது.


ஒரு சில முத்தம் பித்து பிடித்துஅதன் ஆதியை தேட சொல்கிறது.






Wednesday, September 30, 2015

மகளதிகாரம்

என் பொம்மை மகள் 


வானவில்லே விரும்பும் வண்ணம் உன் வண்ணம் 

மயில் தொகை போன்றதொரு அழகு 

எப்பொழுதும் காற்றின் காதுகளை திருகும் உன் கரங்கள் 

மலரின் மேன்மையே தோற்றுப்போகும் உன் பரிசத்தில் 

இதைவிட மேலான வரத்தை தந்துவிட முடியாது கடவுளால்

ஒருவிதத்தில் இதனாலும் கடவுள் நம்பிக்கை வந்தது எனக்கு...

Friday, July 3, 2015

என் சமீபத்திய கீச்சுகள்  


 மரத்தடியில் அமர்ந்து ஓய்வேடுகின்றனர் மரவெட்டிகள் .          

கிடைக்காத முத்தம்போல் பயணப்பட்டுக்கொண்டே இருக்கும் இந்த வாழ்க்கை .

சிறையில் அகப்பட்ட சிறகுகள் போல் துடிக்கிறது தனிமை என்னிடம் ..

கோடை மழையில் குளித்து சென்றது வெயில்..

அடுத்தவர் : அம்மா வந்துட்டாங்களா ? குழந்தை :தெரில அம்மாவதான் கேட்கனும் #மகளதிகாரம்

மறக்க வேண்டும் என்று நினைப்பதெல்லாம் சரியாக நினைவுக்கு வந்துவிடுகிறது .

நிதானம் மிகவும் நிதானமாய் வருவதில்தான் பிரச்சனையே

நமக்குன்னு வரும் போது அநியாயம் கூட நியாயமா தெரியுது .

சின்னதாய் ஒரு புன்னகையோடு துரிதமாய் கடந்துவிட முடிகிறது வெகு சிலரை ..

பசி நேரத்தில் உணவின் வாசனை தரும் பரவசத்தை தருகிறது இந்த மண் வாசனை .

மிதந்து வரும் காகித கப்பலில் நிஜமாகவே ஏறி செல்கிறது மனம் .

மழையின் காலடி சத்தம் கேட்டு மனம் வானத்தில் பறக்கிறது ..

நேரக்கொடுமை என்பது சமயங்களில் வாட்ச் வொர்க் ஆகாமல் போவதே ..

விளம்பரங்களே நம்மை பொருட்களை வாங்க வலியுறுத்துகிறது , தேவைகள் அல்ல .

உண்மை பொய்யைவிட பயங்கரமானது .

இரவு வழிந்தோடி பகலில் விழுகிறது .

சேர்ந்து ஒரே புள்ளியில் காணாமல் போவதெல்லாம் வாய்க்க பெற்ற வரம் .

கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பதெல்லாம் கட்டுப்பாட்டை இழந்த பிறகுதான் .

விட்ட இடத்திலிருந்து தொடங்கும் சண்டையும் , காமமும் .

மௌன பெருவெளியில் பேய்த்தனமாய் அலைகிறது மனம் .

கிரிக்கெட் பார்ப்பதும் , சினிமாவை குறை சொல்வதும் நமது கலாச்சாரத்தில் ஒன்றானது .

விரும்புதல் ஓர் புற்று நோய் மாதிரி ஆளை அழித்துக்கொண்டே வரும் .

வெட்கம் மானம் எல்லாம் மனசுக்குத்தான் , உடம்புக்கு இல்ல .

பொய் கலக்காத உண்மை ஏது ?

ஒரு துளி அன்பு போதும் மீண்டும் துளிர்த்து எழ .

நீ மிதந்து என்னை மிதக்க வைப்பதல்லாம் கற்பனை கூட செய்ய முடியாத வரம் # கருவுற்ற தாய்

வாழ்க்கை வெறுப்பை உமிழும்போது எதை கொண்டு துடைப்பது என்றே தெரியவில்லை ..

நேசிப்பு போன்ற கூர்மையான ஆயுதம் வேறில்லை அதிகம் கிடைத்தாலும் , கிடைக்காமல் போனாலும் .

வலியும் சுகமும் காமத்தோடு முடிந்துவிடுகிறது ஆண்களுக்கு ...கருவுற்ற பின்னும் தொடர்கிறது பெண்களுக்கு ..

மறதி என்பது பல நேரங்களில் வசதியாகவே உள்ளது .

போதும் என்பதெல்லாம் உதட்டளவிலே , சாப்பாட்டை தவிர எல்லா விஷயங்களும் .

நமக்கான பிரச்சனைகள் வைடிங்க் லிஸ்ட்ல்ல இருந்து அப்புறம் கன்பார்ம் ஆகிடுது ...

தன்னடக்கம் மாதிரி ஒரு பெருமையான விஷயம் வேறுதுவும் இல்லை..

டௌரியொட இன்னொரு வெர்ஷன்தான் பையன் செட்டில் ஆகிட்டான , பேக் கிரௌண்ட் எப்படி ? வீடு ?

நாமலே காசுக்கொடுத்து நாமலே அடிமையாகவும் , வேலைக்காரியாகவும் இருக்கனும் ..என்னே நம் பாரத திருநாடு # டௌரி

விலகிவிடலாம் என்று நினைத்த உறவு, விலங்காய் மாறும்போது தவித்துதான் போகிறேன் ..

என்னும் எவ்வுளவு நாளைக்குதாண்டா ஆம்பளன்னா தில் வேணும் , பொம்பளன்னா பொறுத்து போனும்ன்னு சொல்வீங்க ..# ச்சை

குழந்தையாய் இருப்பதில் இருக்கும் வசதி யாரு முத்தம் கொடுத்தாலும் தப்பில்லை , யாருக்கு முத்தம் கொடுத்தாலும் தப்பில்லை..;)