இளையராஜா
இளையராஜாவின் பாடல்களைப்பற்றி பேசும் போதே ஒருவித பரவசம் வருவதைதடுக்க இயலாது. பயணத்தை இனிமையாக்கி சாலைகளை சாரல்களாக கடக்க இளையராஜாவின் இளமைக்காலப் பாடல்கள் மெத்தென இருக்கும்.
பின்னிரவில் தூக்கமின்மையின் துயரம் துடைக்க வரும் இசைவிசிறியாக ராஜாவின் பாடல்கள்.கணத்த பொழுதில் நம்மை காற்றாய் மாற்ற வரும் சில பாடல்கள். பேராஷுட்டில் ஏறி விண்ணில் மிதப்பதுப்போல் இருக்கும் சில பாடல்கள்.
காதலில் உருகி காமத்தில் கரைய - வா வா அன்பே அன்பே
இன்னும்மா காதலிக்க தொடங்கவில்லை என்பதுப்போல் - கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
உன்னில் வீழ்ந்தபின் மீண்டு என்னவாகபோகிறது என்பதற்கு - நீ பார்த்த பார்வைக்கு ஓர் நன்றி
தொலைத்த உறவை .. மீண்டும் அடைந்த பெருமிதமும் .. நெகிழ்ச்சியும்.. - கலைவாணியே உனைத்தானே அழைத்தேன்..
தனிமையில் தனக்கானவனை கற்பனை செய்ய.. மாலையில் யாரோ மனதோடு பேச
சோகத்திற்கும் , மகிழ்ச்சிக்கும் இடையே ஓர் உணர்வு உண்டு மிதவைப்போல அதற்கு ஏற்ற பாடல் நலம் வாழ என்நாளும்..
தன்னைப்பற்றி தானே இசையமைத்ததுப்போல்.. ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா. எந்த தாகம் எடுத்தாலும் அதற்கு ஓர் பாடல் இருக்கிறது இளையராஜாவிடம்.. நம்மையும் கிட்டார் வாசிக்க தூண்டிய பாடல் ..என் இனியப்பொன் நிலாவே.
இப்படி எத்தனையோ, அத்தனையும் லயித்துப்போகவே ஆக்கப்பட்டு இருக்கும். தொலைத்த உறவை நினைக்கவைக்க ஓர் பாடல். எங்கிருந்தோ கேட்டப்பாடல் வெளிக்கொணரும் நினைவு அடுக்கில் மறைந்திருந்ததை. சோர்ந்த நேரத்தில் தழைத்து தலைத்தூக்க சில பாடல்கள். அமர்ந்து மடி சாய்ந்து அழ சில. உணர்வுகளுக்கு பதில்களாக சில பாடல்கள். எத்தனை எத்தனை பாடல்கள் எத்தனை, எத்தனை ராகங்கள் அத்தணைக்கும் அலாபனை செய்ய வேண்டும் நாம் அவரை.ஒரு காலத்தையே இசையால் கட்டிப்போட்ட இசை வல்லுனர்க்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். #HBDRajaSir