ஜெயகாந்தனின் கருணையினால்
அல்ல என்ற குறுநாவலில் தன் நாற்பது வயதுவரை துணையின்றி வாழ்ந்த கௌரியைப்பற்றிய கதை.
இதில் கவனிக்க வேண்டியது நாற்பது வயதுவரைதான். அதில் அந்த வயதுவரையும் ஓர் பெண்; ஆண் துணையில்லாமல் ,தனித்த துணிவுடன் வாழ்ந்ததை அவ்வுளவு
விமர்சியாக எழுதியிருப்பார் .
அதை அழகாக " பதினைந்து வருஷங்களுக்கு முன்பு, டைப் ரைட்டிங் இன்ஸ்ட்டிட்யூட்டில், அவளும் அங்கே ஓர் ஆணை சந்தித்ததுண்டு.
அந்த சந்திப்பில் அவள் அடைந்த இன்பமும் , மயக்கமும் இன்னமும்
அவள் நெஞ்சில் பசுமையாய் குடி கொண்டியிருக்கிறது . அவளுக்கு அது போதும் . அதுவே போதுமென்று
நிறைவு கொள்ளும் வகையில் அவள் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறாள் ; அல்லது தண்டிக்கப்பட்டிருக்கிறாள்.
அவள் கல்யாணம் செய்துகொள்ள
என்பதைவிட. அவளுக்கு கல்யாணம் செய்துவைக்க யாருமில்லை என்றே சொல்லலாம் . அவளுக்கும்
அதே இனிதாய் இருந்தது. திரும்ப அதே ஆணை இத்தனை வருடங்கள் கழி த்து அவர் குடும்பத்தோடு
சந்திக்கும் போது அதை எதிர்கொள்ளும் விதமும் அசாத்தியம். அவரை நிராகரித்து விட்டு அவள்
போன்றே தனித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஓர் ஆணை மணந்துக்கொள்ள விரும்புவதும்.அவர்
தனித்து வாழ்வதிற்கு காரணம் வலிப்பு நோய்.
அவர்களின் திருமணம் எப்படி சாத்தியம் என்று வியக்கும்
சூசையப்பரின் மனைவி அருளம்மாளுக்கு ஏழு குழந்தைகள் , எட்டாவது வயிற்றில் அவளுக்கும் அதே
வயது. அவளின் கணவர் சூசையப்பர் " நாற்பது வயதில் பிள்ளை பெறும்போது கல்யாணம் செய்துக்கொள்ள
கூடாதா " என்று மனதில் நினைக்கிறார். அவளிடம் சொல்லமுடியாது.என்று அங்கு அசால்ட்டாக
அடிப்பார் ஜேகே
கௌரிக்கு அவர் மேல் வந்திருப்பது வலிப்பு நோயின்
கருணையல்ல . அன்பும்,அவர் மேல் இருக்கும்
நேசமும் ,நிச்சயம் இவரை கைபிடித்துவிட வேண்டும்
என்ற எண்ணமும் அதன் சாராம்சமும் நேயர்த்தியாக
விளக்கியிருப்பார். அதே ஜெயகாந்தன்......
#வாழ்க்கை வயதிற்கு அப்பாற்பட்டது.