இளம் வெயில்
மெல்ல அடியெடுத்து
வைத்துத் தன்மேல்
படர்கையில்
வெட்கம் பூத்து
மலரலாம்
என்ற கனவு இருந்தது
மொட்டுக்கு.
எத்தனை யுகங்களை
விழுங்கிவிட்டு
இன்னும் நம் காலில்
வந்து மோதுகிறது
இவ்வலைகள்.
எதையோ ஒப்புக்கொண்டு
அழுகிறது வானம்
வாரியணைத்துக் கொள்கிறது
பூமி.
மலர்களின் வண்ணத்தோடு
போட்டியிடுகிறது வானவில்
முடியாமல்
தோற்று மறைகிறது.
மரம் தன்
அத்தனை கிளைகளையும்
அத்தனை நிழல்களையும்
அத்தனை சுவாசங்களையும்
நமக்குக் கொடுத்துவிட்டு
தனக்கென்று ஏதும் சேமிக்காமல்
செத்து மடிகிறது.
சாயம்போன சேலைப்போல்
உள்ளது வானம் இப்பொழுது
அதை ஆம் என்று
ஒப்புக்கொள்ளக் காத்திருக்கிறது
இலைகளில் நீர்த்துளிகள்
மெல்ல அடியெடுத்து
வைத்துத் தன்மேல்
படர்கையில்
வெட்கம் பூத்து
மலரலாம்
என்ற கனவு இருந்தது
மொட்டுக்கு.
எத்தனை யுகங்களை
விழுங்கிவிட்டு
இன்னும் நம் காலில்
வந்து மோதுகிறது
இவ்வலைகள்.
எதையோ ஒப்புக்கொண்டு
அழுகிறது வானம்
வாரியணைத்துக் கொள்கிறது
பூமி.
மலர்களின் வண்ணத்தோடு
போட்டியிடுகிறது வானவில்
முடியாமல்
தோற்று மறைகிறது.
மரம் தன்
அத்தனை கிளைகளையும்
அத்தனை நிழல்களையும்
அத்தனை சுவாசங்களையும்
நமக்குக் கொடுத்துவிட்டு
தனக்கென்று ஏதும் சேமிக்காமல்
செத்து மடிகிறது.
சாயம்போன சேலைப்போல்
உள்ளது வானம் இப்பொழுது
அதை ஆம் என்று
ஒப்புக்கொள்ளக் காத்திருக்கிறது
இலைகளில் நீர்த்துளிகள்