Wednesday, June 7, 2017

இயற்கை என்னும் கொடை

இளம் வெயில்
மெல்ல அடியெடுத்து
வைத்துத் தன்மேல்
படர்கையில்
வெட்கம் பூத்து
மலரலாம்
என்ற கனவு இருந்தது
மொட்டுக்கு.

எத்தனை யுகங்களை
விழுங்கிவிட்டு
இன்னும் நம் காலில்
வந்து மோதுகிறது
இவ்வலைகள்.

எதையோ ஒப்புக்கொண்டு
அழுகிறது வானம்
வாரியணைத்துக் கொள்கிறது
பூமி.

மலர்களின் வண்ணத்தோடு
போட்டியிடுகிறது வானவில்
முடியாமல்
தோற்று மறைகிறது.

மரம் தன்
அத்தனை கிளைகளையும்
அத்தனை நிழல்களையும்
அத்தனை சுவாசங்களையும்
நமக்குக் கொடுத்துவிட்டு
தனக்கென்று ஏதும் சேமிக்காமல்
செத்து மடிகிறது.

சாயம்போன சேலைப்போல்
உள்ளது வானம் இப்பொழுது
அதை ஆம் என்று
ஒப்புக்கொள்ளக் காத்திருக்கிறது
இலைகளில் நீர்த்துளிகள்
















Tuesday, June 6, 2017

வெயில்

மயில் ஆடி

பல நாட்கள் கண்டிருந்தது

உறைந்துப் போன 

வெயிலின் மிச்சமாக

தாகத்தோடு பார்த்தது 

மான் 

எதையோ விழுங்கிவிட்டு

முடியாமல் கிடந்தது

பாம்பு 

அவ்வுளவுப் பெரிய உடல்

வறண்டப் பாலைவனம் போல்

காட்சியளித்தது யானை

குடுவையில் குனிந்து 

தண்ணீர் தேடும்

ஒரு காகத்தை ஏக்கத்தோடு

எதிர்க்கொண்டது மற்றொரு

காகம்

நீரிலும் வாழும்

பறவை வகைகள் வெறும்

நிலத்திலேயே வாழ 

பழகியிருந்தது  

தணியாத வெயில் 

தணியாத தாகத்தை 

கொடுத்தது

மழை வேண்டி நிற்கும்

பல் உயிரினங்களில்

கடைநிலையில் மனிதன்

தான் முட்டாள் ஆன

தருணத்தை உணர்ந்து

வெட்கத்தோடு மழையை

எதிர்க்கொண்டு.