Tuesday, June 6, 2017

வெயில்

மயில் ஆடி

பல நாட்கள் கண்டிருந்தது

உறைந்துப் போன 

வெயிலின் மிச்சமாக

தாகத்தோடு பார்த்தது 

மான் 

எதையோ விழுங்கிவிட்டு

முடியாமல் கிடந்தது

பாம்பு 

அவ்வுளவுப் பெரிய உடல்

வறண்டப் பாலைவனம் போல்

காட்சியளித்தது யானை

குடுவையில் குனிந்து 

தண்ணீர் தேடும்

ஒரு காகத்தை ஏக்கத்தோடு

எதிர்க்கொண்டது மற்றொரு

காகம்

நீரிலும் வாழும்

பறவை வகைகள் வெறும்

நிலத்திலேயே வாழ 

பழகியிருந்தது  

தணியாத வெயில் 

தணியாத தாகத்தை 

கொடுத்தது

மழை வேண்டி நிற்கும்

பல் உயிரினங்களில்

கடைநிலையில் மனிதன்

தான் முட்டாள் ஆன

தருணத்தை உணர்ந்து

வெட்கத்தோடு மழையை

எதிர்க்கொண்டு.

No comments:

Post a Comment