மயில் ஆடி
பல நாட்கள் கண்டிருந்தது
உறைந்துப் போன
வெயிலின் மிச்சமாக
தாகத்தோடு பார்த்தது
மான்
எதையோ விழுங்கிவிட்டு
முடியாமல் கிடந்தது
பாம்பு
அவ்வுளவுப் பெரிய உடல்
வறண்டப் பாலைவனம் போல்
காட்சியளித்தது யானை
குடுவையில் குனிந்து
தண்ணீர் தேடும்
ஒரு காகத்தை ஏக்கத்தோடு
எதிர்க்கொண்டது மற்றொரு
காகம்
நீரிலும் வாழும்
பறவை வகைகள் வெறும்
நிலத்திலேயே வாழ
பழகியிருந்தது
தணியாத வெயில்
தணியாத தாகத்தை
கொடுத்தது
மழை வேண்டி நிற்கும்
பல் உயிரினங்களில்
கடைநிலையில் மனிதன்
தான் முட்டாள் ஆன
தருணத்தை உணர்ந்து
வெட்கத்தோடு மழையை
எதிர்க்கொண்டு.
No comments:
Post a Comment