யாருமற்ற நேரம்
ஏதோ ஒரு வருடல்
தானாய் வரும் தன்னிரக்கம்
பொதுவில் ஒளியும்
பேய் மனம்
இயல்பாக நடமாடும்
எதையோ முடித்த
சாதனை உணர்வு
அர்த்தமற்று நாட்களை
கழித்ததாய் உருளும்
உள்மனம்
அற்பமான சில
தருணங்களை
எண்ணி உவகைக்கும்
விடுதலை வேண்டி
கெஞ்சும் மனம்
சிறைக்குள்ளே
கொஞ்சும் சில கணம்
பித்தாகி பிதற்றும்
ஞானியாக
உதிக்கும் சில
எண்ணற்ற முடிவுகளை
எண்ணி களிப்பதும்
முடிவிலியை நினைத்து
மருகுவதும்
இறக்கமற்று நிகழும்
தன்னியல்பாய்
உறங்கிக்கொண்டே
விழித்திருப்பதுப்போல்.
No comments:
Post a Comment