மிகவும் கூர்மையான
எளிதில் வீழ்த்தக்கூடிய
சட்டென சாய்க்க கூடிய ஒன்று
வார்த்தை
பேசிய பின் திரும்ப பெறலாகாது
சுட்ட பானையை போன்று
இறுதிவரை இருந்து அப்படியே
உடையவேண்டியதுதான்
புறப்பட்ட அம்பு மீண்டும்
வில்லில் சேராது என்பதை போல்
மடியும்வரை மங்கிக்கிடக்கும்.
No comments:
Post a Comment