Tuesday, April 25, 2017

ஒரு மனதில் இருவர்

அதெப்படி ஒரு பெண் இரண்டு பேரை விரும்ப முடியும் என்பது கேள்வி.

 இப்படி வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் ஒருவரை விரும்புகிறீர்கள். (இதில் நீங்கள் என்பது  
இருப்பாலரும்) அவரை மணம் முடிக்க முடியாமல் போய்விட்டது. பின் வேறொருவை மணந்து நடைபெறும் வாழ்க்கையில் வாழ்க்கையோடு கலந்தும்(கடந்தும்)விட்ட அவரை நேசிக்காமல் இருக்க முடியாது. அதேப்போல் நாம் ஒருவரோடு வாழ வேண்டும் என்று ஏங்கியவரை வெறுக்க இயலாது. என்றேன்றும் நிலைத்திருக்கும் அக்காதல். இதை ஏற்பவர் சிலர் மறைப்பவர் பலர். காதலித்து மணப்புரிந்தவர்களின் தேர்வும் சமயங்களில் தவறுவதுண்டு அப்பொழுதும் நாம் தவறவிட்ட சில உறவுகளும் உண்டு.

  இதன் புரிதல் இல்லாமல் அதைக் கள்ளக்காதல் என்று பிதற்றுவது காதலைக் கல்லாமையின் விளைவு அது. பொதுவான கண்ணோட்டத்தில் அதைப்பார்த்துப் பழிப்பது இயல்பாகிவிட்டது. காதலின் தேடல்கள் எங்கு முடியும் என்று நினைக்கிறீர்கள்?  காமத்தில்தான் அதில் எந்த ஐயப்பாடுமில்லை. இல்லையென்று பெயரளவில் மறுக்கலாம். ஆக, கலவிதான் வாழ்க்கையா என்றால் சமயங்களில் ஆமாம் என்பதே பதில். பெண்கள் தனக்கு வேண்டியதைத் தயங்கியே சொல்ல வேண்டியுள்ளது அல்லது சொல்லாமல்யிருப்பது இவ்விஷயங்களில். இன்றளவும் அதற்கான காரணம் ஆண்கள் பெண்களைக் கையாளும் விதம். "என் வாழ்க்கையை நான் இழந்துவிட்டேன்" என்பது தாம்பத்யத்தையும் குறிக்கும்.

  குறுகிய மனம் கொண்டு இதை அணுகினால் உவர்ப்பாகவே இருக்கும். இதில் என்ன தவறு  இது அவளின் வாழ்க்கை, அவளின் தேவை, அவளின் நீட்சி என்பது புரிந்தால் பேதமில்லை. அவளின் உணர்வுகள் நிராகரிக்கப்படுகிறது அல்லது மதிப்பதேயில்லை என்னும் சூழலில் தன் உணர்வுகளைக் கொட்ட ஓர் உறவின் வெளித்தேவைப்படுகிறது. அவளின் தேவையைக்  கொச்சைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதே மனிதர்களின் இயல்பு.  பெண்ணிற்கு மட்டும் விதிவிலக்கா?

 "சிக்மண்ட் ஃப்ராய்ட்" பற்றிப் படித்திருந்தீர்கள் என்றால் கொஞ்சம் புரியும் அதிகப்படியான மனநோய், நிரம்பியல் நோய்கள் என நோய்கள் வருவதிற்கான காரணங்கள் பாலுணர்ச்சி என்பதே அவரின்  கோட்பாடுப் பல அய்வுகளின் பெயரில் வெளியிட்டார். வழக்கமாகப் பல பாராட்டுக்களும் , எதிர்ப்புகளும் ஒருசேர அவருக்கு வந்தது. அது ஒர் உளவியல் ரீதியான பிரச்சனை என்பது இங்குப் பலருக்கும் புரிவதில்லை. அதை இழிவாகப்பார்த்து மிகச் சுலபமாகக் கொச்சைப்படுத்திவிடுகின்றனர். அப்படிச் சொன்ன ஃப்ராய்ட்தான் father of psychology. பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு, தேவைகள் உண்டு, ஆசைகள் உண்டு என்பது புரிந்தால் நலம்.


Tuesday, April 18, 2017

கோடைக்காலப் பயணம்

இம்முறை கோடைப்பயணம் செல்ல வாய்ப்புக்கிடைத்தது கொடைக்கானல் மற்றும் மூணார். அதில் ஏற்பட்ட குளுமையான அனுவப்பதிவு. எங்களுக்கு சொந்தமான டஸ்டர் காரை என் கணவரே ஓட்டிச்சென்றார் சென்னையிலிருந்து மூணார் 600km. முன்னதாகவே கொடைக்கானலில் ரூம் புக் செய்துவிட்டோம் எங்களுடன் நண்பர் ஒருவர் தன் மனைவியுடன் வந்திருந்தார்.


 சென்னையிலிருந்து கொடைக்கானல் 430km என் கணவருக்கு மட்டுமே ட்ரைவ் பண்ண தெரிந்திருந்ததால் அவ்வுளவு தூரம் ஒருவரே ஓட்டுவது என்பது கடினம். ஆகையால், 12/04/17 அன்று மாலை 4.30 மணிப்போல் தொரைப்பக்கம், சென்னையிலிருந்து கிளம்பி திருச்சிக்கு இரவு 10 மணிக்கு சென்று தங்கிவிட்டோம். 1000 ரூபாய் நான்ஏசி ரூம் ஓக்கே நன்றாகத்தான் இருந்தது. காலை 9.30  மணிப்போல் மீண்டும்  பயணப்பட்டோம் திண்டுக்கல்லை நெருங்கியவுடன் பதநீர் , கருப்பட்டி டீ , இளநீர் என்று நம் சூழலே மாறியது. கொடைக்கானல் கிழிருந்து மலை ஏறுவதுக்குள்ளான தூரம் 43km.

  மலைகளின் இளவரசி கொடைக்கானலை வந்தடைந்தோம் மணி மூன்றாகி இருந்தது சாப்பிட்டுவிட்டு லேக் பார்க்க கிளம்பினோம். சீசன் என்பதால் அதிக கூட்டம். ரம்யமான அழகு நிறைந்திருந்தது எங்கும் மகிழ்ச்சி மேளங்கள் கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு.போட்டிங் முடித்துவிட்டு நேரமிருந்தமையால் சைக்கிள் வாடகைக்கு எடுத்து முழு ஏரியையும் சுற்றினோம் ஒரு மணி நேரத்திற்கு 60 ரூபாய். உண்மையில் ஓர் நல்ல அனுபவம் குளுமையான காற்றுடன் மிதித்துக்கொண்டே செல்வது அற்புதமான உணர்வு. 

  காலையில் குணா பாறை, பைன் போரெஸ்ட் ,வியூ பாண்ட் போன்ற இடங்களை பார்த்தோம். கொடைக்கானலில் சோலார் அப்சர்வேட்ரி லேப் இருந்தது ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கட்டியது.ஹோம் மேட் சாக்லேட்ஸ் இங்கு மிகவும் பிரசித்தி கால் கிலோ 80 ரூபாய் சாக்லேட்ன் விலையும் இனித்தது.வழக்கமான மலைப்பிரதேசம் பழங்கள் கிடைக்கும். குப்பை போன்று பெருக்கிவிட்டது தங்கும்விடுதிகள். வழி எங்கும் கேப்களும், கைட்களும் புகையாக நம் மேல் பரவுகின்றனர். இந்த அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமும் குறைந்தவர்கள் இல்லை மக்கள் திருந்தவேமாட்டார்கள் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பாட்டிலும் , கவர்களும் மிதக்கின்றன.

 14/04/17 அன்று மாலை  மூன்று மணிப்போல் மலையிறங்க தொடங்கிவிட்டோம். தேனீயில் ஜூஸ் சாப்பிட்டுவிட்டு தொடர்ந்தோம் அடுத்து போடி, போடிநாயக்கனுர் என்று வந்துது போடி கடந்தவுடன் மலை ஏற தொடங்கியாகிவிட்டது 85கிம் மலைப்பிரதேசம்தான் அதுவும் இரவில் பயணித்தது அட்வன்சர் போல்தான் இருந்தது. என் இரண்டு வயது மகளுக்கு கொஞ்சம் முடியாமல் வாந்தி வந்ததால் இன்னும் தாமதமாகத்தான் மூணார் சென்றடைத்தோம். வழியில் ஓர் செச்சி கடையில் அப்பமும் கொண்டக்கடலையும் சாப்பிட்டோம். போடிமெட்டு கேரளாவை சேரும் வழிகளில் சிறு கிராமங்களும் தேயிலை தோட்டமும் காணப்பட்டன. தமிழ்நாட்டு எல்லையை தாண்டினாலும் அங்கங்கே தமிழ் பலகைகள் காணநேரிடுகிறது.  

   இரவு 10 மணிக்கு மூணார் அடைந்தோம் மூணாரின் மையப்பகுதியிலே சங்கீதா என்ற தமிழ்நாட்டு உணவகம் ஒன்று உள்ளது (நீங்கள் நினைக்கும் சங்கீதா இல்லை) இங்கு நம்மூரில் கிடைக்கும் இட்லி, தோசை கிடைக்கும். சீசனில் 1000 ரூபாgய் ரூமை இரண்டாயிரம் என்று சொல்வதுண்டு அதுப்போல விலைக்கு ஏற்றாற்போல். அதிகம் கலைத்ததால் கொஞ்சம் தாமதமாகத்தான் காலை கார் புக் செய்து  கிளம்பினோம்.ஸ்பைசஸ் பிளாண்ட்ஸ் என்று தனியாக தோட்டம் வைத்து உங்களுக்கு இயற்கை மருந்துகளின் பெருமையை சொல்லி முடிந்தவரை உங்களை வாங்கவைப்பர். இயற்கை மருந்து நன்றுதான் அலோபதிக்கு இது ஆயிரம் மடங்கு நன்று ஆனால்,விலை இயற்கை எய்வதுப்போல் உள்ளது என்பது வருந்தத்தக்கது.


   யானை சவாரி தவறுதான் இருப்பினும் ஓர் ஆர்வம் காரணமாக சவாரி செய்தோம். உள்ளுக்குள்  ஓர் பயம் சீசன் என்பதால் இரண்டு நாட்களாய் தொடர்ந்து நடந்துக்கொண்டு இருக்கிறதாம் லைட்டா கோபப்பட்டாக்கூட அவ்வுளவுதான். எங்கும் பணம் வியாபித்து இருக்கு ஒருவருக்கு 400 ரூபாய். அழகான மலைச்சரிவுகள் தேயிலை தோட்டம் படிகள்போல் அமைந்துள்ளதை பார்க்கையில் இறங்கி ஓடவேண்டும் போலுள்ளது.மலையின் உயரம் காண முற்படுகையில் மேகம் மறைக்கும் மோகம் கொண்டு. ஓர் ஜீப் சவாரி கொண்டுசெல்கிறார்கள் காட்டுப்பாதைகளின் ஊடே நீர்வீழ்ச்சி , டேம் என்று கூட்டிசெல்கின்றனர் ஓர் பெரியமுதலை  வாயினுள் சென்று வெளிவருவதுப்போல் உள்ளது. தேமேயென்று சில பார்க்குகளும், வியூ பாயிண்ட்களும் இருக்கும். அந்த ஜீப் சவாரிக்கு 4000 ரூபாய் சொல்லி இறுதியில் 3500 ஒப்புக்கொண்டனர். கேப்க்கு 1500 ரூபாயும் 100 டிப்ஸும் .


   மீண்டும் சாப்பிட்டுவிட்டு இரவு  7.30 மலையிறங்க தொடங்கினோம் இருக்கவே இருக்கு கூகுள் மேப் அப்படி வரும் போது ஓர் பாதை 15கிம் கிட்ட ஜீப் மட்டும் செல்லக்கூடிய பாதையாக இருந்தது என்ஏஹ்லிருந்து விலகிவந்து மீண்டும் சேர்க்கிறது அப்போது எனக்கு பேஸ்புக்கில் பார்த்த ஓர் புகைப்படம் ஞாபகம் வந்தது கூகுள் மேப் நம்பி சென்றால் மலை முக்கில் கார் நிற்கும். கேட்டால் ஷார்ட்டெஸ்ட் பாத் என்று சொல்லும். போகும்போது  எப்படியோ அப்பாதையை தவறி சரியாக சென்றுவிட்டோம். மைனா படம் அங்குதான் எடுத்தது. பரதேசி மூணாரில். எப்படியோ சில ஆயிரங்களை செலவு செய்து குளுமையை அனுபவித்தாகிவிட்டது டீசலுக்கு இணையாக டோல் கட்டணும் எங்கும் கட்டணம் எதிலும் கட்டணம். இந்த வெயிலுக்கு இனிமையான பழசாறு இவ்விடங்கள். நன்றிகள் பல என் கணவருக்கும் டஸ்டருக்கும்.





Wednesday, April 5, 2017

அறம் என் அனுபவத்தில்.

அறம் என்ற புத்தகம் ஜெயமோகன் எழுதிய உண்மை மனிதர்களின் கதைகள். வாழ்க்கையை அறையும். ஒவ்வொரு கதை படித்த பின்னும் அதிலிருந்து மீள்வது ஓர் சவால்.

அதில் வரும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை ஓட்டமும். இந்த உலகம் அவனை இட்டு செல்லும் தூரமும் அப்படமாக வடித்தியிருப்பார். உண்மையில் ஓர் கதை படித்தால் ஒருநாள் எனும் இடைவெளி வேண்டும் அடுத்ததை தொட துணிந்து பாருங்கள் என்பதைப்போன்று இருக்கும்.

அந்த புத்தகத்தில் வரும் கதைகள் பெரும்பாலும் திருவனந்தபுரம், கன்னியாகுமாரி, நாகர் கோயில் சுற்றுவட்டாரங்களை ஒட்டியது. அந்த அழகிய  தமிழ் என்னை மிகவும் பற்றியது. சரியாக சொல்லவேண்டுமெனில் "தாயாளி" என்னை அதற்கு ரசிகையாக மாற்றிவிட்டார் இந்த ஜெயமோ.

எவ்வுளவு சாதி பிரிவுகள் எப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதையும், எப்படியெல்லாம் அடிமைப்பட்டுகிடந்தனர் என்பதையும் விவரித்துயிருப்பார். நாயாடிகள் என்ற சாதியை பற்றிய உண்மைகள் என்னை கலங்கடிக்கச்செய்தன. "அலைந்து திரியும் குறவர்களின் ஓர் பிரிவு. இவர்களை பார்த்தாலே தீட்டு என்ற நம்பிக்கை இருந்தமையால் இவர்கள் பகலில் நடமாட முடியாது" 'நூறு நாற்களில்' என்ற கதையில்.

அய்யர், நாடார், நாடர்களின் உட்பிரிவுகள்,பிள்ளைவாள், கோட்டி இப்படி எண்ணற்ற சாதி பிரிவினைகளின் தர்கங்களும், தரவுகளும் பதியப்பட்டுள்ளது. "உடம்பில் வயிறு தவிர வேறு உறுப்பிருக்கிறது என்ற நினைப்பே இல்லாத வாழ்க்கை. கோபமே அடங்காத துர்தேவதை மாதிரி வயிறு பொங்கிக்கொண்டே இருக்கும். கூரைக்குப் பிடித்த தீ போன்றது பசி" 'வணங்கான்' என்ற கதையிலிருந்து.

இப்படி சொல்வதாய் இருந்தால் நான் திரும்பவும் அந்த புத்தகத்தையேதான் மறுபதிப்பகம் செய்யவேண்டும்.இருந்தும் எதற்கு உரைத்தேன்யென்றால் உங்களுக்கு ஓர் புரிதல்காகதான்.இந்நூலில் அவர் உரையாடிய உறவுக்கொண்ட எழுத்தாளர்களும் அவர்களின் வாழ்க்கைமுறையும் இரு வேறு கதைகளில் வருகிறது. எழுத்தாளர்களின் உரையாடலில் வரும் இலக்கியமும், கவிதையும், சொல் நயமும் அமுதுறச்செய்யும்.

ஒரு சில விஷயங்கள் வியப்பில் ஆழ்த்தும் பிறகு அது பழகிவிடும் அளவிற்கானது இப்புத்தகம். என்னை அதிகம் பாதித்துயிருக்கிறதா இல்லை அதிக பாத்திருப்புக்குள்ளாக்கும் புத்தம்தானா என்பது நீங்கள் படித்து உணரவேண்டியது. 'யானை டாக்டர்' ஓர் அருமையான அனுபவம் யானைகளின் மேல் நடந்ததை போன்ற உணர்வு அதிலும் டாக்டர் கே என்கின்ற கிருஷ்ணமூர்த்தி அருமையான மனிதர் யானையையே வென்றவர்.

'ஓலைச்சிலுவை'  என்ற கதையில் நம் நாட்டில் கிருத்துவம் நுழைந்த விதமும் டாக்டர்
 சாமர்வேல் என்ற அற்புதமான மனிதரின் அற்பணைப்பும் திறம்பட கையாண்டுயிருக்கிறார்.எளிய மனிதர்களின் வாழ்க்கை முறைகளை கண்முன் நிறுத்தி அதிரவைக்கிறார்.'கோட்டி' என்ற கதையில் பூமேடை என்கின்ற தனி மனிதர் தன்னலம் இன்றி இறுதிவரை அடுத்தவருக்காக வாழ்ந்து தன் அனைத்து சொத்துக்களையும் இழந்தவர். சுதந்திர போராட்ட தியாகியும் கூட எதற்கு அஞ்சியும் வாழாமல் தனியாகவே போராட்டங்களை நடந்தியவர்.ஒரு தனி மனிதனால் என்ன செய்யமுடியும் என்ற எண்ணத்தை மாற்றியவர்.

அதேப்போன்று காரி டேவிஸ் என்பவர் உலகப்போரில் விமானமோட்டியாக இருந்து அதில் நிகழ்ந்த அழிவுகளை எண்ணி தன்னுள் மனம் வெதும்பி அதிலிருந்து வெளியே வந்தார். அப்படி வந்தவர் ஒரே உலகம் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தை முன்நிறுத்த தனியாகவே பாடுபட்டு தனக்கென்னு எந்த நாடும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் போராடி உலகக்குடிமகனுக்கான பாஸ்போர்ட் ஒன்றை பெற்றார். தன்னை அமேரிக்க குடிமகன் என்பதிலிருந்து விடுவித்துக்கொண்டார். 'உலகம் யாவையும்' என்ற கதையில் இவரைப்பற்றி படிக்கலாம்.

இந்த புத்தக்கத்தைப் பற்றி நான் எழுதியிருப்பது விமர்சனம் அல்ல எனில் எனக்கு அந்த தகுதி இல்லை. இது அந்த புத்தக்கத்தில் எனக்கு உண்டான அனுபவம். இதைப்படித்து உங்களை அப்புத்தகம் படிக்க தூண்டினால் அதை என் வெறியாக கருதுவேன்.நன்றி.


இந்த புத்தக்கத்தில் வரும் ஆளுமைகள்.

டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி (யானை டாக்டர்) 1923 - 2003

மார்சல் ஏ.நேசமணி (வணங்கான்) 1895 - 1968

தியோடர் ஹோவார்ட் சாமர்வெல் (ஓலைச்சிலுவை) 1890 - 1975

'பூமேடை' எஸ்.ராமைய்யா (கோட்டி) 1924 - 1996

கோமல் சுவாமிநாதன் (பெருவலி) 1935 -1995

காரி டேவிஸ் (உலகம் யாவையும்) 1921- 2013