Wednesday, February 14, 2018

அத்தருணம்

ஆனந்தமான இசை
எரிச்சலூட்டும் சத்தமாக
ஒலிக்கும் அத்தருணம்

மழலை பேச்சும்
சலித்துப்போகும் அத்தருணம்

விருப்பப்பட்ட உடை
வெறுப்பாக மாறும் அத்தருணம்

அழகிய கவிதை
வெளியில் எறியாத குப்பையாக
தோன்றும் அத்தருணம்

ஏதோ ஓர் ஊழ்
தண்ணீரில்லா
ஆழ் கிணற்றில் என்னை
தள்ளிவிட்டு மேலிருந்து
பார்த்து சிரிக்கும் அத்தருணம்
ஆயிரம் மரண வலியில்
உயிர் வாழ்ந்துக்
கொண்டுயிருப்பேன். 

No comments:

Post a Comment