சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலின் நாயகி கங்கா தன் அறியா வயதில் ஏற்பட்ட சின்ன சலனத்தின் காரணமாக தன் முழு வாழ்க்கையும் தொலைக்க நேர்வது விபத்தன்று. புனிதம், கலாச்சாரம் என்ற பெயரில் ஒரு பெண்ணின் வாழ்வை அப்படியே மென்று முழுங்கிவிட்டு இன்னும் தணியாத தாகத்தோடு அலையும் தகிப்புதான் இந்நாவலின் சாரம்.
காரில் லிப்ட் கொடுத்தவருடன் தன்னை இழந்து வீடு திரும்பும் கங்காவை அவர் அம்மாவும், அண்ணண்ணும் அடித்தும், திட்டியும், அசிங்கப்படுத்தி அவள் அண்ணன் வீட்டை விட்டு விரட்டிவிடப் பெண்ணுக்காக அம்மாவும் உடன் வந்துவிடுவார். அவள் அம்மாவின் ஒன்று விட்ட அண்ணன் வெங்கடாசலம் என்ற வக்கீல் வெங்கு மாமா அவளைப் படிக்க வைப்பார் ஒரு வகையில் அது அவளுக்கான வடிகாலாக அமைத்துக் கொடுத்ததில் வெங்கு மாமா செய்தது மிகப் பெரிய உதவி. இருப்பினும் அவரிடம் இருக்கும் அந்த ப்பர்வர்ட் தனக்கான நேரம் வேண்டி காலைச் சுற்றும் பூனையைப் போன்று கங்காவை விட்டு விலகமாட்டார். இது ஒரு வித மனிதனின் மனநிலை மேன்மை உள்ளடங்கிய அதே நேரத்தில் இப்படியான சில ப்ளித்திக்களும் ஒருங்கே அமையப் பெற்றது.
மனிதர்களின் மனோநிலையும் அதற்கு எதிரான தர்க்கமும் நாவலின் அனைத்து இடங்களிலும் அலையடித்துக் கொண்டேயிருக்கும். இந்நாவலே இங்கு எது தர்க்கமென்று தர்க்கத்தை கூண்டிலேற்றி வினா எழுப்புவதேயாகும். அவளின் மாமாவிடம் உரையாடும் பொழுது அவர் சொன்னது.. 'You can be a concubine to someone. But, not a wife to someone அப்படி நீ ஒதுங்கின்டா நீ கெட்டாலும் நம் தர்மங்களையும் சாஸ்திரங்களையும் கெடுக்காத புண்ணியம் உனக்கு உண்டு '. எவ்வளவு ஒரு குரூரமான மன நிலை இது. அவள் எதோடும் சேராமல் காலத்தின் கண்களை ஊற்று நோக்கி தனக்கென்று ஒரு வரையறைக்குள் கடந்து கொண்டிருக்கையில். ஆர்.கே. வி என்ற எழுத்தாளர் அப்படியே அவளின் கதையை அக்னி பிரவேசம் என்ற பெயரில் கதையின் மிக முக்கியமான விடையம் மற்றும் திருப்பு முனையாக அக்கதையின் முடிவை மட்டும் மாற்றி அமைத்திருப்பார். அதாவது கங்காவின் அம்மா அவ்வுண்மை தெரிந்தவுடன் அதே அடி, திட்டும் உடன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மகளை அணைத்து ஆறுதல் சொல்லி அவளின் தலையில் தண்ணீரைக் கொட்டி பாவம் கழிந்துவிட்டது இச்சம்பவத்தை ஒரு விபத்தெனக் கருதிக் கடந்துவிடு என்று சொல்வதுதான் எத்தனை உன்மத்தம். இக்கதையைப் படித்துவிட்டு இதைச் செய்யத் தவறிய தன் அம்மாவின் மேல் கோபம் கொண்டு அப்புத்தகத்தை அவள் அம்மாவின் மேல் எறிந்து சென்று தன்னிலை குளத்தில் இறங்கி நீந்துவாள். வெங்கு மாமா வந்ததும் தன் குற்ற உணர்ச்சிகளையும் குமுறல்களையும் காக்கைக்கு இரைக்கும் பருக்கைகள் போல் இரைப்பார் கங்காவின் அம்மா. அதற்கும் அதே புராணங்களை அடுக்கி வீட்டு நாயை சங்கிலியில் கட்டுவதை போன்று அவரின் நியாயத்தைக் கட்டுவார். இறுதியில் 'அவளுக்கு அவ்வளவு சமத்து இருந்தால் அந்த அவனையே தேடி கண்டுப்பிடிச்சு கட்டிக்கொள்ளச் சொல்' என்று கூறும் போது கங்கா வாசலில் நுழைவாள்.
அதன்படியே காரில் வந்த பிரபுவைத் தேடிப் பிடித்தும் விடுவாள். ஆனால், அவருக்குக் கல்யாணம் ஆகி கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணும் உண்டு என்பதை அறிந்த கங்கா. பிரபு வழக்கமான பணக்கார மகனின் அத்தனை கேடுகளையும் உடைய உடைந்தும் போன குழந்தையின் பொம்மை. தன்னால் கங்காவின் வாழ்க்கை இப்படி ஆனதை கண்டு மிக வருத்தப்பட்டு எப்படியாயினும் அதைச் சரியாக்கி விட வேண்டும் என்று துடிப்பது நீரில்லா மீனின் உணர்வு. அவர்களின் பெரும்பாலுமான உரையாடல் நல்ல ஆங்கிலம் கொண்டது. ஜெயகாந்தன் அதில் நம்மை உருக்கி உலோகம் செய்கிறார். கங்கா குறைந்த பட்சம் அவரின் ஆசை நாயகி என்ற பெயரளவிலாவது வாழ்ந்துவிடுவது என எண்ணுகிறாள். அதற்கும் இவர்களின் சாஸ்திரங்கள் ஃபிலைட் பிடித்து வந்து சண்டையிடும்.
பிரபுவும் தனக்கான அன்பை வேண்டி சடுதியில் இருப்பார் அவரின் வாழ்வில். உண்மையில் பிரபு ஓர் அரவணைப்புக்கு ஏங்கும் குழந்தை. அவரின் சிறந்த குணங்களை குடிப்பழக்கம் மறைக்க முனைப்படும். சருகு பச்சையத்திற்கு ஏங்குவதாய் அவரின் ஆசைகள். வாழ்க்கையில் பெரிய பிடிமானமில்லாமல் மஞ்சுவே அருமருந்தாக வாழ்வார். ஆகையால், கங்காவின் நேசம் அவருக்கும் ஆதர்ச தோள்தான். இதில் பிரபுவின் மகளாக வரும் மஞ்சுவிற்கு இருக்கும் பக்குவமும், புரிதலும் வியக்கும் நல்லுணர்வு. ஏதோ ஒரு நிலையில் இவர்களின் உறவை மஞ்சுவிற்கு விளக்க நேர்வதும் அதை அவள் கையாளும் விதமும் அத்துணை லாவகம். இப்படத்தை வெங்கு மாமாவிடம் வெளியிடத் துடித்த கங்காவின் அம்மா கொட்டித் தீர்ப்பார். அவரின் போக்கில் இதையும் சரியல்ல என்று முடிப்பார். அவர் முன்பே கூறியதுபோல் அது ஏன் நானாக இருக்கக் கூடாது என்ற அவரின் ஆவலாதியையும் தண்ணீர் ஊற்றி அணைப்பாள். இருப்பினும் அவருக்கு ஒரு சில விஷயங்களில் இருக்கும் புரிதலும், மேன்மையும் கங்கா வணங்கச் செய்யும் ஒன்று. அவரே 'I would like to meet that gentleman' என்கிறார். அச்சொல் அந்த அவரை ஜென்டில்மேன் என்று கூறுவது அவரின் நல்விடையங்கள்.
ஆர். கே. வின் வழியாக வரும் ஒரு விடோவரின் திருமண வரனை ஏற்கச் சொல்லி கங்காவிடம் கேட்பது அவளுக்கு ஒரு நல்வாழ்க்கை வேண்டும் என்பதைத் தாண்டி இப்படியான அவள் விருப்பப்பட்ட இவ்வாழ்க்கையை விட்டோழிந்து இவர்களின் புனிதத்திற்கு மஞ்சள் நீராட்டு செய்ய வேண்டுமென்பதே. அப்படி அவரை நாடிச் செல்கையில்தான் கங்காவின் அண்ணனிற்கு தெரிய வரும் பிரபுவின் மனத்தூய்மை. இந்த நாவலை புதியதாகத்தான் நான் கிளாசிக் என்று சொல்ல வேண்டியதில்லை. 1970திலிருந்து பலர் சொல்லி உளமகிழ்ந்திருப்பர். இந்நாவலின் வாதி பிரதிவாதி இரண்டுமே தர்க்கம்தான். சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்நாவலின் ஸ்பரிசத்தை ஒருமுறையாவது உணருங்கள்.
#ஜெயகாந்தன்
காரில் லிப்ட் கொடுத்தவருடன் தன்னை இழந்து வீடு திரும்பும் கங்காவை அவர் அம்மாவும், அண்ணண்ணும் அடித்தும், திட்டியும், அசிங்கப்படுத்தி அவள் அண்ணன் வீட்டை விட்டு விரட்டிவிடப் பெண்ணுக்காக அம்மாவும் உடன் வந்துவிடுவார். அவள் அம்மாவின் ஒன்று விட்ட அண்ணன் வெங்கடாசலம் என்ற வக்கீல் வெங்கு மாமா அவளைப் படிக்க வைப்பார் ஒரு வகையில் அது அவளுக்கான வடிகாலாக அமைத்துக் கொடுத்ததில் வெங்கு மாமா செய்தது மிகப் பெரிய உதவி. இருப்பினும் அவரிடம் இருக்கும் அந்த ப்பர்வர்ட் தனக்கான நேரம் வேண்டி காலைச் சுற்றும் பூனையைப் போன்று கங்காவை விட்டு விலகமாட்டார். இது ஒரு வித மனிதனின் மனநிலை மேன்மை உள்ளடங்கிய அதே நேரத்தில் இப்படியான சில ப்ளித்திக்களும் ஒருங்கே அமையப் பெற்றது.
மனிதர்களின் மனோநிலையும் அதற்கு எதிரான தர்க்கமும் நாவலின் அனைத்து இடங்களிலும் அலையடித்துக் கொண்டேயிருக்கும். இந்நாவலே இங்கு எது தர்க்கமென்று தர்க்கத்தை கூண்டிலேற்றி வினா எழுப்புவதேயாகும். அவளின் மாமாவிடம் உரையாடும் பொழுது அவர் சொன்னது.. 'You can be a concubine to someone. But, not a wife to someone அப்படி நீ ஒதுங்கின்டா நீ கெட்டாலும் நம் தர்மங்களையும் சாஸ்திரங்களையும் கெடுக்காத புண்ணியம் உனக்கு உண்டு '. எவ்வளவு ஒரு குரூரமான மன நிலை இது. அவள் எதோடும் சேராமல் காலத்தின் கண்களை ஊற்று நோக்கி தனக்கென்று ஒரு வரையறைக்குள் கடந்து கொண்டிருக்கையில். ஆர்.கே. வி என்ற எழுத்தாளர் அப்படியே அவளின் கதையை அக்னி பிரவேசம் என்ற பெயரில் கதையின் மிக முக்கியமான விடையம் மற்றும் திருப்பு முனையாக அக்கதையின் முடிவை மட்டும் மாற்றி அமைத்திருப்பார். அதாவது கங்காவின் அம்மா அவ்வுண்மை தெரிந்தவுடன் அதே அடி, திட்டும் உடன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மகளை அணைத்து ஆறுதல் சொல்லி அவளின் தலையில் தண்ணீரைக் கொட்டி பாவம் கழிந்துவிட்டது இச்சம்பவத்தை ஒரு விபத்தெனக் கருதிக் கடந்துவிடு என்று சொல்வதுதான் எத்தனை உன்மத்தம். இக்கதையைப் படித்துவிட்டு இதைச் செய்யத் தவறிய தன் அம்மாவின் மேல் கோபம் கொண்டு அப்புத்தகத்தை அவள் அம்மாவின் மேல் எறிந்து சென்று தன்னிலை குளத்தில் இறங்கி நீந்துவாள். வெங்கு மாமா வந்ததும் தன் குற்ற உணர்ச்சிகளையும் குமுறல்களையும் காக்கைக்கு இரைக்கும் பருக்கைகள் போல் இரைப்பார் கங்காவின் அம்மா. அதற்கும் அதே புராணங்களை அடுக்கி வீட்டு நாயை சங்கிலியில் கட்டுவதை போன்று அவரின் நியாயத்தைக் கட்டுவார். இறுதியில் 'அவளுக்கு அவ்வளவு சமத்து இருந்தால் அந்த அவனையே தேடி கண்டுப்பிடிச்சு கட்டிக்கொள்ளச் சொல்' என்று கூறும் போது கங்கா வாசலில் நுழைவாள்.
அதன்படியே காரில் வந்த பிரபுவைத் தேடிப் பிடித்தும் விடுவாள். ஆனால், அவருக்குக் கல்யாணம் ஆகி கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணும் உண்டு என்பதை அறிந்த கங்கா. பிரபு வழக்கமான பணக்கார மகனின் அத்தனை கேடுகளையும் உடைய உடைந்தும் போன குழந்தையின் பொம்மை. தன்னால் கங்காவின் வாழ்க்கை இப்படி ஆனதை கண்டு மிக வருத்தப்பட்டு எப்படியாயினும் அதைச் சரியாக்கி விட வேண்டும் என்று துடிப்பது நீரில்லா மீனின் உணர்வு. அவர்களின் பெரும்பாலுமான உரையாடல் நல்ல ஆங்கிலம் கொண்டது. ஜெயகாந்தன் அதில் நம்மை உருக்கி உலோகம் செய்கிறார். கங்கா குறைந்த பட்சம் அவரின் ஆசை நாயகி என்ற பெயரளவிலாவது வாழ்ந்துவிடுவது என எண்ணுகிறாள். அதற்கும் இவர்களின் சாஸ்திரங்கள் ஃபிலைட் பிடித்து வந்து சண்டையிடும்.
பிரபுவும் தனக்கான அன்பை வேண்டி சடுதியில் இருப்பார் அவரின் வாழ்வில். உண்மையில் பிரபு ஓர் அரவணைப்புக்கு ஏங்கும் குழந்தை. அவரின் சிறந்த குணங்களை குடிப்பழக்கம் மறைக்க முனைப்படும். சருகு பச்சையத்திற்கு ஏங்குவதாய் அவரின் ஆசைகள். வாழ்க்கையில் பெரிய பிடிமானமில்லாமல் மஞ்சுவே அருமருந்தாக வாழ்வார். ஆகையால், கங்காவின் நேசம் அவருக்கும் ஆதர்ச தோள்தான். இதில் பிரபுவின் மகளாக வரும் மஞ்சுவிற்கு இருக்கும் பக்குவமும், புரிதலும் வியக்கும் நல்லுணர்வு. ஏதோ ஒரு நிலையில் இவர்களின் உறவை மஞ்சுவிற்கு விளக்க நேர்வதும் அதை அவள் கையாளும் விதமும் அத்துணை லாவகம். இப்படத்தை வெங்கு மாமாவிடம் வெளியிடத் துடித்த கங்காவின் அம்மா கொட்டித் தீர்ப்பார். அவரின் போக்கில் இதையும் சரியல்ல என்று முடிப்பார். அவர் முன்பே கூறியதுபோல் அது ஏன் நானாக இருக்கக் கூடாது என்ற அவரின் ஆவலாதியையும் தண்ணீர் ஊற்றி அணைப்பாள். இருப்பினும் அவருக்கு ஒரு சில விஷயங்களில் இருக்கும் புரிதலும், மேன்மையும் கங்கா வணங்கச் செய்யும் ஒன்று. அவரே 'I would like to meet that gentleman' என்கிறார். அச்சொல் அந்த அவரை ஜென்டில்மேன் என்று கூறுவது அவரின் நல்விடையங்கள்.
ஆர். கே. வின் வழியாக வரும் ஒரு விடோவரின் திருமண வரனை ஏற்கச் சொல்லி கங்காவிடம் கேட்பது அவளுக்கு ஒரு நல்வாழ்க்கை வேண்டும் என்பதைத் தாண்டி இப்படியான அவள் விருப்பப்பட்ட இவ்வாழ்க்கையை விட்டோழிந்து இவர்களின் புனிதத்திற்கு மஞ்சள் நீராட்டு செய்ய வேண்டுமென்பதே. அப்படி அவரை நாடிச் செல்கையில்தான் கங்காவின் அண்ணனிற்கு தெரிய வரும் பிரபுவின் மனத்தூய்மை. இந்த நாவலை புதியதாகத்தான் நான் கிளாசிக் என்று சொல்ல வேண்டியதில்லை. 1970திலிருந்து பலர் சொல்லி உளமகிழ்ந்திருப்பர். இந்நாவலின் வாதி பிரதிவாதி இரண்டுமே தர்க்கம்தான். சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்நாவலின் ஸ்பரிசத்தை ஒருமுறையாவது உணருங்கள்.
#ஜெயகாந்தன்