Saturday, February 25, 2017

வன்மம்


அமைதியாக இருக்கும் 

யார் கண்களிலும்படாது

யாரும் அவ்வுளவு எளிதில் அறிய இயலாது

ஆனால், நிச்சயம் அனைவரிடத்திலும் உண்டு

ஏதோ ஓர் பொழுது

ஏதோ ஓர் கணம்

ஏதோ ஓர் நிலை

இருளில் ஒளிந்திருக்கும் 

ஓர் கொடிய மிருகமாக

வெளிவரும் வன்மம் 

எல்லோர் கண்களும் ஓர் துளி

வன்மமேனும் விழுங்கியிருப்போம்

தெரிந்தும், தெரியாமலும்...


Friday, February 24, 2017

கோபம்

கைகளை பற்றி இழுத்தேன்

நீ கவனியாமல் இருந்ததால்

பொய்கோபம் கொண்டு நகர்ந்தேன்

சலனமே இல்லாமல் அருகில் 

அணைப்பதற்கு ஏதுவாக நின்றாய்

பார்க்காமலே பார்த்தேன் 

எவ்வுளவு நேரம்தான் கோபம் இல்லாமல்

கோபிப்பது

முத்தத்தின் வாயிலாக மெத்தையின்

வசத்தில்

உன்னை விலக்குவதுப்போல்

அணைத்துக்கொண்டிருந்தேன்

நீ நீந்தினாய்

நான் நீராடினேன்.

நினைவுத்தடம்

நீ என்மேல் வீசிய
அத்தனை சொற்களையும்

ஒரே அணைப்பில் நீர்த்துப்போக
செய்வாய்

முத்ததிற்கு ஏது
பொழுதும், வேளையும்

நித்தமும் உன் நினைவுகளில் நீந்துவது

கொஞ்சமும் சலனம் இல்லாமல்
நடந்தேறும்

நீ என்னை வீழ்த்தும் போது
நான் உன்னை ஆட்கொண்டிருப்பேன்

மழையென பொழிவாய் என் மேல்
ஓர் துளியில்லாமல் துடைத்தெடுப்பாய்

கனவுகளின் நிஜம் நீ
மறந்தும் மறுக்க மாட்டேன்,
என் நாசி வழியே நீ உட்புகுந்ததை

இடைவிடாது இடைப்பற்றும் போது

இடரிவிடவே செய்கிறேன்.

Wednesday, February 1, 2017

பகல் கனவு

காதல் தின்று காமம் செய்தாய் 

எச்சில் படர்த்தி உச்சி முகர்ந்தாய் 

உடை விலக்கி உன்னை போர்த்தினாய் 

எல்லாமும் உன் விருப்பமாக 

என் விருப்பத்தின் எல்லாமுமாக நீ 

பகல் கனவு நினைவாகி கொண்டிருந்தது 

பகல் எல்லாம் இரவானது 

தூவானம் நின்றும் 

தூறல் நிற்கவில்லை என்பதுபோல் 

எல்லாம் முடிந்த பின்னும் 

உன் வாசம் என்னை 

மீண்டும் மீண்டும் கிளர்ச்சியடைய 

செய்தது...உன் தவறா  அல்லது 

என் ஆசையா ..