அமைதியாக இருக்கும்
யார் கண்களிலும்படாது
யாரும் அவ்வுளவு எளிதில் அறிய இயலாது
ஆனால், நிச்சயம் அனைவரிடத்திலும் உண்டு
ஏதோ ஓர் பொழுது
ஏதோ ஓர் கணம்
ஏதோ ஓர் நிலை
இருளில் ஒளிந்திருக்கும்
ஓர் கொடிய மிருகமாக
வெளிவரும் வன்மம்
எல்லோர் கண்களும் ஓர் துளி
வன்மமேனும் விழுங்கியிருப்போம்
தெரிந்தும், தெரியாமலும்...