Friday, February 24, 2017

நினைவுத்தடம்

நீ என்மேல் வீசிய
அத்தனை சொற்களையும்

ஒரே அணைப்பில் நீர்த்துப்போக
செய்வாய்

முத்ததிற்கு ஏது
பொழுதும், வேளையும்

நித்தமும் உன் நினைவுகளில் நீந்துவது

கொஞ்சமும் சலனம் இல்லாமல்
நடந்தேறும்

நீ என்னை வீழ்த்தும் போது
நான் உன்னை ஆட்கொண்டிருப்பேன்

மழையென பொழிவாய் என் மேல்
ஓர் துளியில்லாமல் துடைத்தெடுப்பாய்

கனவுகளின் நிஜம் நீ
மறந்தும் மறுக்க மாட்டேன்,
என் நாசி வழியே நீ உட்புகுந்ததை

இடைவிடாது இடைப்பற்றும் போது

இடரிவிடவே செய்கிறேன்.

4 comments: