Wednesday, February 1, 2017

பகல் கனவு

காதல் தின்று காமம் செய்தாய் 

எச்சில் படர்த்தி உச்சி முகர்ந்தாய் 

உடை விலக்கி உன்னை போர்த்தினாய் 

எல்லாமும் உன் விருப்பமாக 

என் விருப்பத்தின் எல்லாமுமாக நீ 

பகல் கனவு நினைவாகி கொண்டிருந்தது 

பகல் எல்லாம் இரவானது 

தூவானம் நின்றும் 

தூறல் நிற்கவில்லை என்பதுபோல் 

எல்லாம் முடிந்த பின்னும் 

உன் வாசம் என்னை 

மீண்டும் மீண்டும் கிளர்ச்சியடைய 

செய்தது...உன் தவறா  அல்லது 

என் ஆசையா ..


No comments:

Post a Comment