காதல் தின்று காமம் செய்தாய்
எச்சில் படர்த்தி உச்சி முகர்ந்தாய்
உடை விலக்கி உன்னை போர்த்தினாய்
எல்லாமும் உன் விருப்பமாக
என் விருப்பத்தின் எல்லாமுமாக நீ
பகல் கனவு நினைவாகி கொண்டிருந்தது
பகல் எல்லாம் இரவானது
தூவானம் நின்றும்
தூறல் நிற்கவில்லை என்பதுபோல்
எல்லாம் முடிந்த பின்னும்
உன் வாசம் என்னை
மீண்டும் மீண்டும் கிளர்ச்சியடைய
செய்தது...உன் தவறா அல்லது
என் ஆசையா ..
No comments:
Post a Comment