கொலுசு மட்டுமே ஆடையாய்
இருக்கும் பொழுது
வெட்கம் போர்த்தி
உன் முத்தத்தை மறுதலித்தேன்.
பேரன்பைப் பெறுவதற்கு
பெரும் ஆயத்தம் வேண்டும்.
மழைக்கும் மண்ணுக்கும்
எப்படி உறவுண்டோ
அதே உறவு மழைக்கும்
கொஞ்சலுக்கும் உண்டு.
காத்திருப்பு தான் அன்பைக் கூட்டும் இயந்திரம்.
மழை நேரத்தில்
என் பிரத்தியேகமான
ஆடை நீ.
சில்லேன என் மேல் விழும் தூறல்
சூரிலேன உன்னை
நினைவுபடுத்துகிறது.
கரையாத பொழுதொன்றில்
முழுவதும் கரைந்து
நுரைகளில் நிறைந்திருந்தேன்
வெடித்து அழுகும் ஒரு அழுகையில்
தேக்கி வைத்த முழு அன்பும் வெளிப்படும்.
வழியெங்கும் வேதனைகள்
கடக்கக் கடக்க
வந்து கொண்டே இருக்கிறது
நீண்ட வானம் போல்.
உன் கண்கள் பேராயுதம்
உன் காதலை விட.
எழுதாமல்விட்ட கவிதைகள்
எல்லாம் நீ சிகையை
சரிசெய்கையில் பறக்கிறது
பாசிப்படிந்த குலத்தின்
குளிர்ந்த நீரில்
முதலில் பதியும் பாதம்
போல் சில்லிடுகிறது
சில நினைவுகள்.
நினைவுக் கோப்பையில்
மதுபோல் மிதக்கிறேன்.
எரியும் தேகத்தை
அணைக்க வேண்டும்
வியர்வைப் பெருங்கடல்.
ஒளித்து வைக்க முடியாது
உணர்வுகள் மெல்லப் புகையாக படர்கிறது.
காதலின் பால் காமம் வளர்ப்பது ஒரு வழி..
காமத்தின் பால் காதல் வளர்ப்பது ஒரு வழி..
எதுவாக இருப்பினும் காமத்தின் பால் ஒரு காதல் உண்டு.
வெப்பம் போக்க
மீண்டும் ஈரம் கேட்பேன்.
மீள முடியாத
நினைவுகளில்தான்
மீட்கிறேன்
போர்வைகள் எப்பொழுதும்
போர்த்த மட்டுமே
பயன்படுவதில்லை.
இல்லாத ஆடைமேலேல்லாம்
பரவியது உன் வாசம்.
விலகுதலும் சேருதலும்
தானே காதல் அல்லது காமம்.
மழையின் வேகthதிற்கு
ஈடு கொடுக்க முடியாமல்
பனியாய் உருகினேன்.
பனியின் விடுதலை
சூரியனை அடைவதிலே உண்டு.
மழைக்கும் மண்ணுக்கும்
எப்படி உறவுண்டோ
அதே உறவு மழைக்கும்
கொஞ்சலுக்கும் உண்டு.
பின்னிரவில் வரும்
நண்பகல் கனவு
பிரயாசையின் சுவடுகள்
மிதந்து போகும்
பரிசலேன மனம்
நீரோடை வாழ்வில்,
ஊடாடும் நீர்
சுழிகளென
வேகத் தடைகள்.
உன்னை நேர்கோட்டில்
சந்திப்பதைத் தவிர்த்து
வட்டமடித்துக் கொண்டிருக்கிறேன்
வாழ்வில்.
ஞாபக கண்ணாடியின்
பாதரசம் போனாலும்
அப்பின்பம் நிலைத்திருக்கவே செய்கிறது.
விடாப்பிடியாக விட்டுப் பிடிப்பதில்
என்ன விளையாட்டு.
நல்ல குளிர்
கடும் தவத்தையும்
அசைத்துப் பார்க்கிறது
காற்று கல்லை அசைப்பதைப்போல்.
காற்றைப் போல்
ஆரத்தழுவுகிறது
உணர்வுகள் உடலெங்கும்.
முத்தச்சாவி
உயிர் வழியைத் திறக்க
உதவுகிறது.
No comments:
Post a Comment