Friday, May 26, 2017

வடிவேலுவும் மகளும்

நாம் மிகவும் சிரித்த மகிழ்ந்த ஓர் வடிவேலுவின் நகைச்சுவை. அவரின் நகைச்சுவை ஒவ்வொன்றும் அற்புதம்தான் அதிலும் இது இப்பொழுது எனக்கு காட்சிக்கு பொருந்துகிறது. 

அந்த நகைச்சுவை காட்சி காலையில் ஆட்டோ ஒட்ட கிளம்பும் முன் அவர் தன் தாய், தந்தையை ஆரத்தி எடுத்து வழிப்பட்டு, காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று செல்வார். மீண்டும் மாலை மதுவை அருந்திவிட்டு அதே பெற்றோரை விரட்டி விரட்டி அடிப்பார். அதே நிலைமைதான் இப்பொழுது எனக்கு.

நன்கு அழகாக கழுத்தோடு கட்டுயணைத்து முத்தமிடுவாள் தொடர்சியாக அன்பிலிருந்து பிழைப்பது அவ்வுளவு கடினம். துரோகத்திலிருந்துக் கூட தப்பித்து விடலாம். அவ்வாறு  முழ்கி திளைப்பேன் அவளின் அன்பில். ஊட்டி விடுவாள், தண்ணீர் பருகச் செய்வாள். ஆனால், நானோ அன்பும் சேர்த்து பருகுவேன். தட்டி உறங்கவைப்பாள் உறங்கிப்போவேன் அவளின் அன்பில். 

அதே மகள் கோபம் வந்தவுடன் கையில் கிடைப்பதில் எல்லாம் அடிப்பாள். அதில், வடிவேலு சொல்வதைப்போல் 'ஜோடியா மிஸ் ஆகுறீங்களா' என்று கேட்பதைப்போல் விரட்டி விரட்டி அடிப்பாள். 

மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது பௌண்டரிகளில் இருக்கும் ஃபீல்டர் போல் எப்பொழுதும் நம்மை நோக்கி எந்த நேரமும் பால் வருமென்று அலர்டா இருப்பேன். பெளண்டரிகளை விளாசுவது அவளின் வழக்கம். கைகளில் கிடைக்கும் விளையாட்டு பொருள் அத்தனையும் ஏறிவாள். அப்பொழுது என்னை அடிப்பது அவளின் நோக்கம் அல்ல. அது ஒரு பொழுதுபோக்கு. 

எது எப்படியோ மீண்டும் சொல்கிறேன் வடிவேலு காமெடி வாழ்க்கையில் அத்தனை காட்சிக்கும் பொருந்துகிறது. #VadiveluForLife

4 comments: