இரவுகளில் வரும் நினைவுகள் தரும்
விடிவதற்கான ஏக்கத்தை.
மழையில் நனையும் ஒரு மல்லிகைப்பூ....
மணம் பரப்பிக்கொண்டே.....
காத்திருந்தது மெத்தையில் மலர.
தள்ளிவிட்டு தள்ளிநின்று பார்ப்பதெல்லாம்.. எல்லலில் சேராது..
உன் அழகியலில்.
நீ என்னை பார்க்காதவிட்ட நேரம் யாவும்
நான் உன்னைப்பார்த்த நேரம்.
மழையிலும் வெயிலாகத் தெரிகிறது உனதன்பு.
என் தாகம் தணிக்க நீ வேண்டும் என்பது,
என் தேவைகளின் ஒன்றுயென
நீ இயல்பாக புரிந்துகொள்வது.
சொல்லமுடியாத ஓர் அழகியல்.
உன் நினைவுகளைச் செரிமானம் செய்ய
ஓர் இரவு போதுமானதாக இல்லை.
உன்னைச் சந்தேகிக்கும் மணித் துளிகள் கூட உனக்கான என் சிலாகிப்புகளே..
கொஞ்சல்கள் யாவும் கெஞ்சும் உன் அன்பின்
பெருவிழிகளைப்பார்த்து.
வெட்கமெல்லாம் அப்படி
ஓரமாக இருக்கட்டும்..
அணைத்து அனைத்தும்
முடிந்தபின் எடுத்து
உடுத்திக்கொள்ளலாம் வெட்கத்தையும்.
கொஞ்சம் கொஞ்சினாலும்,
வெட்க புன்முறுவல் பூத்து
அதீத அன்பு சொறிவதே காதல் எனப்படுவதோ.
இணைந்து இசைந்து
கலந்து கரைந்து
காணாமல் போனால்தான் என்ன.
பெருகிவந்த அன்பில் நான் முழ்கிய பின் ..
நேரம் கழித்து கரையைத் தேடுகையில் ..
களைத்திருந்தாய் நீ.
உன்னை அணைப்பது என் ஆசைகளில் ஒன்று..
உனக்கு முத்தம் தருவது என் பேராசைகளில் ஒன்று.
புறம் என்னும் அகம் கலவி.
உன்னில் தொலைவதும், மீண்டும் என்னை தேடுவதும்
என் அலாதிகளில் ஒன்று.
உன் நினைவுகளில் தேய்ந்துவிட்டேன்..
வளர்பிறையாக விரும்புகிறேன். ;-)
காணாமல் போன கனவுகள் எல்லாம் கண்முன் வந்ததுபோல் உள்ளது உன்னைக் கண்டதும்.
என் தவறுகள் உனக்கான நியாயங்கள்.
உன்னைப்பற்றியெல்லாம் சொல்லாமல் விட்டால் அது என் தவறு..
உன்னைப்பற்றியெல்லாம் சொன்னால் அது என் மாபெரும் தவறாகிவிடும்.
மழையில் நினைந்த இலைகள் போல் என்மேல் எங்கும் உன் அன்பு.. நீ தொட்டதும் மொத்தமாக உன்மேல் உதிர்ந்தன.
சில்லென்ற ஓர் மழை உள்ளுக்குள் இருக்கும் உன் நினைவுகளை இழுத்து என்மேல் போர்த்துகிறது.
வெற்றுக் காகிதத்தில் எதைக் கொண்டும்
நிரப்பலாம்..
நான் எழுத்துக்களாக உன்னை நிரப்பினேன்.
குளிர்ந்த காற்றுக்கும்
உன் முத்தத்திற்கும் எப்பொழும்
ஓர் தொடர்பு உண்டு..
உன்னை அணைப்பதே உன்னை வீழ்த்தத்தான்.
.
No comments:
Post a Comment