Thursday, May 25, 2017

மகளெனும் கவிதை..

மகளெனும் கவிதை

எவ்வளவு படித்தாலும் முடிவதேயில்லை


மகளெனும் பெருங்காவியம்

எவ்வளவு சாகசங்கள் நிகழ்த்தினாலும் சலிப்பதேயில்லை


மகளெனும் வானவில்

எவ்வளவு வண்ணங்கள் கூட்டினாலும் அழகு குறைவதேயில்லை


மகளெனும் மலர்

எத்தனை முறை மலர்ந்தாலும் உதிர்வதேயில்லை


மகளெனும் பேரன்பு

எவ்வளவு எடுத்தாலும் குறைவதேயில்லை.

7 comments: