#சுஜாவின்நினைவுநாள் ❣❣
முன்குறிப்பு: கொஞ்சம் பெரிசுதான் படிச்சுடுங்க.
சுஜாதாவே என் வாசிப்பின் தொடக்கக்கால எழுத்தாளர். அப்படி ஓர் ஈர்ப்பு உண்டு அவர் எழுத்தின் பால். எழுத்துகளை விரயம் செய்வது அறவே பிடிக்காது அவருக்கு. ஒரு பேராவில் சொல்ல வேண்டியதை ஒரு வரியில் முடித்துவிடுவார். எழுத்தின் நயமும், அதில் நகைப்பும் மென்னையாக மலரின் மணம் போல் இழைந்தோடும்.
ஒரு வித்தியாசமான பாணியில் கதையைத் தொடங்குவதும் முடிப்பதும் அவருக்கே உரியப் பாணி. நான்பிக்ஷனையும் எளிதாக பிக்ஷனில் கொண்டு வந்துவிடுவார் என்பது அவர் கட்டுரைகளில் புலப்படும். மிக நவீனமாக இருக்கும் அவர் எழுத்து நடை. அதிகமான ஆங்கில சொற்களை நமக்கு அறிமுகப் படுத்தியவர். சுவாரஸ்யமே அவரின் ஊற்றுக் கண். நாம் ஆயாசமாகிவிடும் இடம் வருவது தெரிந்து அங்கிருந்து ஓர் இழை எடுப்பார் தொடர்ந்து நம்மை இட்டுச் செல்ல. அவரின் குறுநாவல்கள், நாவல்கள், சிறுகதைகள் என்று அனைத்திலும் வியாபித்திருக்கும் அறிவியல். எத்தொன்றையும் சட்டென அறிவியல் பாணியில் விளக்கிவிடுவதில் அவர் ஒரு காட் ஃபாதர்.
காதல் கதைகள், க்ரைம் த்ரில்லர், சைன்ஸ் ஃபிக்ஷன் இன்னும் பல இத்தியாதிகளில் புகுந்து விளையாடியவர். என்னளவில் சைன்ஸ் ஃபிக்ஷன் கதைகளை முதலில் தமிழில் அதிகம் அறிமுகப்படுத்தியவர். இனிப்பைக் கண்டால் உற்சாகத்துடன் ஓடி வரும் குழந்தைகள் போல் துள்ளல் உண்டாக்கியது இவரின் எழுத்துக்களே. இவரின் க்ரைம் த்ரில்லர் கதைகளில் வரும் கணேஷ், வசந்த் கதாபாத்திரங்கள் பெருவாரியான மக்களைக் கவர்ந்தது. எனக்கும் மிக அணுக்கமான ஒன்றுதான் அப்பாத்திர படைப்புகள். வசந்த் செய்யும் குறும்புத் தனங்கள் . பேசிக்கொண்டே நமக்கு ஊசிப் போட்டுவிடும் டாக்டரை போல் மிக மெல்லிய அடல்ட் ஒன்லி ஜோக்ஸ் இடையில் புகுத்திவிடுவார். கணஷின் இன்டலிஜென்ஸ் என்று ஒரு மாதிரி கலந்துகட்டி க்ளாஸ் ஆகயிருக்கம்.
மூன்று கடிதங்கள் என்ற ஒரு கதை..கடிதம் ஒன்று இரண்டு மூன்று என்று கொடுத்திருப்பார். இதில் எது சரியென புரிந்துக்கொள்ளக் கதை முடிந்த பின்னும் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஒரு எழுத்தாளனின் வெற்றியென்பது வாசகர்களைச் சிந்திக்க விடுதல் அதற்கான ஸ்பேசை சுஜாதா வாரி வழங்குவார். ஒரு லுப் கதையும் உண்டு. உடம்புதான் முடியவில்லையே என்று மருத்துவமனையில் கொண்டுச் சேர்த்தால் அங்கிருந்து மீண்டு வந்து. அதனையும் பல வண்ண மாத்திரைகளா அள்ளி நம் மும் வைக்கிறார். அவரின் நிலையை நின்ற மேனிக்கு நகைச்சுவையோடு பரிமாறுவது ஒரு சிறப்பான விருந்து வாசகர்களுக்கு.
அவரின் நேரடி அனுபவமும், அவரின் மைண்ட் வாய்ஸையும் படிக்க சுஜாதாவின் கற்றதும், பெற்றதும் என்ற இதழில் படிக்கலாம் பாகங்களாக. இந்த இடத்தில் விகடனிற்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும் எனில் அவரை எழுத சொல்லி வற்புறுத்தியதற்காக. இல்லையேல் நமக்குக் கிட்டாமலே போயிருக்கும் ஒரு ஆத்ம சுவை. அவரின் அறிவியல் அறிவை அள்ளிக்குடிக்க சுஜாதாவின்
ஏன்?
எதற்கு?
எப்படி?
படியுங்கள். சுஜாதா ஒரு எழுத்தாளர் மட்டும் அன்றி பன்முக வித்தகர் என்ற சொலவடைக்கு இணையாக இருப்பவர். பெல் நிறுவனத்தில் பணி புரிந்து, இந்திய விமான துறையிலும் பணிப் புரிந்து மற்றும் EVM Electronic voting machine வடிவமைத்துக் கொடுத்தவர். திரையுலகிலும் கால் பதித்தவர். திரைக்கதை , வசனங்கள் எழுதினார். ஷங்கர் மற்றும் மணிரத்தினம் படங்களில் உடன் பணியாற்றியவர். அவருக்குப் பின் ஷங்கர் படங்களில் ஜெயமோகன் வசனம் எழுதுவதை ஏற்றிருக்கிறார் மனமோ சுஜாதவைத் தேடி மருகுகிறது.
எதுவாகயிருப்பினும் காலத்தின் ஓட்டத்தோடு ஒத்துப்போதல் என்று சொல்லக்கூடிய survival of the fittest என்பதற்குச் சரியாக வரக்கூடியவர் சுஜாதா. என் நினைவில் வரும் மற்றொருவர் வாலி இருவருக்குமே சொந்த ஊர் ஸ்ரீரங்கம்தான் மற்றும் இருவரின் உண்மையான பெயரும் ரங்கராஜன் தான். என்ன ஒரு coincidence பாருங்கள். மிகச் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் காலத்திற்கு முன்பே செல்லக் கூடியவர் அதை அவர் கதைகளில் காணலாம். ஒரு விமான கடத்தல் கதை எழுதிய பின்தான் காத்மாண்டு விமான கடத்தல் நடந்தது கிட்டதட்ட அவரின் கதை போலவே. அதற்கு அவரே பதில் அளித்திருந்தார் நான் என்ன தீர்க்கதரிசியா அப்படியெல்லாம் இல்லை என்றும் உலகில் பல விஷயங்கள் இப்படி பொருந்திபோவதைப் பட்டியல் இட்டு இது எல்லாமே ஒரு தற்செயலாக நடப்பதே இதில் எந்தவித கற்பிதங்களையும் கொள்ள வேண்டாம் என்றார்.
எளிய வழியில் மக்களுக்குச் சேர நிறைய எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், புறநானூறு, திருக்குறள். மற்றும் சிறுகதை எழுதுவது எப்படி?, திரைக்கதை எழுதுவது எப்படி ? என்று எளிய முறையில் பயிற்றுவிக்கும் நூல்களும் தந்துதவினார். அவரின் வாசகர்கள் அவருடன் தேடி உறவாடுவதும், கோபித்துக் கொள்வதும், அன்பு பாராட்டுவதும் என நடந்தேறியுள்ளது. ஒருவர் அவர் இல்லம் தேடிச் சென்று உங்களின் அனைத்து கதைகளும் பிரசுரம் ஆகிறது என்னோடது என் ஆகவில்லை படித்துக் கூறுங்கள் என்றாராம் அது ஒரு காதல் கதை அதில் போதிய வர்ணனைகள் இல்லாததால் நீங்கள் காதலித்து இருக்கிறீர்களா? என்றார் சுஜாதா அவர் இல்லை என்றதும். காதலித்துவிட்டு வந்து எழுதுங்கள் என்றார்.
அதன் பின் இவர் சொல்கிறார் He had the last word என்று "நீங்கள் கூடத் தான் கொலைகளைப்பற்றி கதை எழுதுகிறீர்கள்".
ஒருவருடன் உரையாடியதைக்கூட அவ்வளவு அழகாக வடிப்பார். ஒரு புதுமண தம்பதிகளை நலம் விசாரித்ததில் அந்த மாப்பிள்ளை மிகவும் அலுத்துக்கொண்டார் அவருக்கு எப்பொழுதும் கைகளை நடுவில் இடுக்கி கொண்டு சுருண்டு படுப்பதுதான் பழக்கமாம் இப்பொழுது முடியவில்லை என்று. அதற்கு அவர் 'உங்கள மாதிரி ஆளுங்கதான் சார் இப்படியெல்லாம் எழுதிடுறீங்க ஈர் உடல் ஓர் உயிர்ன்னு' என்றார். பெரும்பாலான ஆண்கள் அப்படிப் படுப்பதற்கான உளவியல் காரணத்தைக் கூறிவிட்டு. 'அது நான் இல்லப்பா சினிமா பாடல் ஆசிரியர்கள்ன்னு சொன்னேன்'. 'ஒரு வேலை அவர்களுக்கு இந்த பழக்கம் இல்லையோ என சொல்லிப்பார்த்தேன்' என்றார். அவரின் முதல் கதை வெளியான அனுபவத்தை ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் கதைகளில் வரும் . அவர் வீட்டின் அருகே இருக்கும் கடையில் அவ்வளவு துரிதமாகப் புத்தகங்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டது எனில் அனைத்தையும் நானே வாங்கிவிட்டேன் என்பார்.
இம்மாதிரி கலந்து கட்டிய காக்டெயில் சுஜாதா. என்னதான் ஜெயகாந்தன், ஜெயமோகன், கல்கி, ஜானகிராமன் என்று படித்தாலும் அடுத்த வீட்டுக் குழந்தைகளை எவ்வளவு கொஞ்சினாலும் மீண்டும் நம் வீட்டுக் குழந்தையை கொஞ்சும் பொழுது ஒரு சகம் வரும் பாருங்க அதுமாதிரி மனம் சுஜாதாவிடம் வந்து நின்றுவிடுகிறது. ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு sapiosexual என்று. Yes. I love him because, of his intelligence.
-சுபாஷினி
முன்குறிப்பு: கொஞ்சம் பெரிசுதான் படிச்சுடுங்க.
சுஜாதாவே என் வாசிப்பின் தொடக்கக்கால எழுத்தாளர். அப்படி ஓர் ஈர்ப்பு உண்டு அவர் எழுத்தின் பால். எழுத்துகளை விரயம் செய்வது அறவே பிடிக்காது அவருக்கு. ஒரு பேராவில் சொல்ல வேண்டியதை ஒரு வரியில் முடித்துவிடுவார். எழுத்தின் நயமும், அதில் நகைப்பும் மென்னையாக மலரின் மணம் போல் இழைந்தோடும்.
ஒரு வித்தியாசமான பாணியில் கதையைத் தொடங்குவதும் முடிப்பதும் அவருக்கே உரியப் பாணி. நான்பிக்ஷனையும் எளிதாக பிக்ஷனில் கொண்டு வந்துவிடுவார் என்பது அவர் கட்டுரைகளில் புலப்படும். மிக நவீனமாக இருக்கும் அவர் எழுத்து நடை. அதிகமான ஆங்கில சொற்களை நமக்கு அறிமுகப் படுத்தியவர். சுவாரஸ்யமே அவரின் ஊற்றுக் கண். நாம் ஆயாசமாகிவிடும் இடம் வருவது தெரிந்து அங்கிருந்து ஓர் இழை எடுப்பார் தொடர்ந்து நம்மை இட்டுச் செல்ல. அவரின் குறுநாவல்கள், நாவல்கள், சிறுகதைகள் என்று அனைத்திலும் வியாபித்திருக்கும் அறிவியல். எத்தொன்றையும் சட்டென அறிவியல் பாணியில் விளக்கிவிடுவதில் அவர் ஒரு காட் ஃபாதர்.
காதல் கதைகள், க்ரைம் த்ரில்லர், சைன்ஸ் ஃபிக்ஷன் இன்னும் பல இத்தியாதிகளில் புகுந்து விளையாடியவர். என்னளவில் சைன்ஸ் ஃபிக்ஷன் கதைகளை முதலில் தமிழில் அதிகம் அறிமுகப்படுத்தியவர். இனிப்பைக் கண்டால் உற்சாகத்துடன் ஓடி வரும் குழந்தைகள் போல் துள்ளல் உண்டாக்கியது இவரின் எழுத்துக்களே. இவரின் க்ரைம் த்ரில்லர் கதைகளில் வரும் கணேஷ், வசந்த் கதாபாத்திரங்கள் பெருவாரியான மக்களைக் கவர்ந்தது. எனக்கும் மிக அணுக்கமான ஒன்றுதான் அப்பாத்திர படைப்புகள். வசந்த் செய்யும் குறும்புத் தனங்கள் . பேசிக்கொண்டே நமக்கு ஊசிப் போட்டுவிடும் டாக்டரை போல் மிக மெல்லிய அடல்ட் ஒன்லி ஜோக்ஸ் இடையில் புகுத்திவிடுவார். கணஷின் இன்டலிஜென்ஸ் என்று ஒரு மாதிரி கலந்துகட்டி க்ளாஸ் ஆகயிருக்கம்.
மூன்று கடிதங்கள் என்ற ஒரு கதை..கடிதம் ஒன்று இரண்டு மூன்று என்று கொடுத்திருப்பார். இதில் எது சரியென புரிந்துக்கொள்ளக் கதை முடிந்த பின்னும் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஒரு எழுத்தாளனின் வெற்றியென்பது வாசகர்களைச் சிந்திக்க விடுதல் அதற்கான ஸ்பேசை சுஜாதா வாரி வழங்குவார். ஒரு லுப் கதையும் உண்டு. உடம்புதான் முடியவில்லையே என்று மருத்துவமனையில் கொண்டுச் சேர்த்தால் அங்கிருந்து மீண்டு வந்து. அதனையும் பல வண்ண மாத்திரைகளா அள்ளி நம் மும் வைக்கிறார். அவரின் நிலையை நின்ற மேனிக்கு நகைச்சுவையோடு பரிமாறுவது ஒரு சிறப்பான விருந்து வாசகர்களுக்கு.
அவரின் நேரடி அனுபவமும், அவரின் மைண்ட் வாய்ஸையும் படிக்க சுஜாதாவின் கற்றதும், பெற்றதும் என்ற இதழில் படிக்கலாம் பாகங்களாக. இந்த இடத்தில் விகடனிற்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும் எனில் அவரை எழுத சொல்லி வற்புறுத்தியதற்காக. இல்லையேல் நமக்குக் கிட்டாமலே போயிருக்கும் ஒரு ஆத்ம சுவை. அவரின் அறிவியல் அறிவை அள்ளிக்குடிக்க சுஜாதாவின்
ஏன்?
எதற்கு?
எப்படி?
படியுங்கள். சுஜாதா ஒரு எழுத்தாளர் மட்டும் அன்றி பன்முக வித்தகர் என்ற சொலவடைக்கு இணையாக இருப்பவர். பெல் நிறுவனத்தில் பணி புரிந்து, இந்திய விமான துறையிலும் பணிப் புரிந்து மற்றும் EVM Electronic voting machine வடிவமைத்துக் கொடுத்தவர். திரையுலகிலும் கால் பதித்தவர். திரைக்கதை , வசனங்கள் எழுதினார். ஷங்கர் மற்றும் மணிரத்தினம் படங்களில் உடன் பணியாற்றியவர். அவருக்குப் பின் ஷங்கர் படங்களில் ஜெயமோகன் வசனம் எழுதுவதை ஏற்றிருக்கிறார் மனமோ சுஜாதவைத் தேடி மருகுகிறது.
எதுவாகயிருப்பினும் காலத்தின் ஓட்டத்தோடு ஒத்துப்போதல் என்று சொல்லக்கூடிய survival of the fittest என்பதற்குச் சரியாக வரக்கூடியவர் சுஜாதா. என் நினைவில் வரும் மற்றொருவர் வாலி இருவருக்குமே சொந்த ஊர் ஸ்ரீரங்கம்தான் மற்றும் இருவரின் உண்மையான பெயரும் ரங்கராஜன் தான். என்ன ஒரு coincidence பாருங்கள். மிகச் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் காலத்திற்கு முன்பே செல்லக் கூடியவர் அதை அவர் கதைகளில் காணலாம். ஒரு விமான கடத்தல் கதை எழுதிய பின்தான் காத்மாண்டு விமான கடத்தல் நடந்தது கிட்டதட்ட அவரின் கதை போலவே. அதற்கு அவரே பதில் அளித்திருந்தார் நான் என்ன தீர்க்கதரிசியா அப்படியெல்லாம் இல்லை என்றும் உலகில் பல விஷயங்கள் இப்படி பொருந்திபோவதைப் பட்டியல் இட்டு இது எல்லாமே ஒரு தற்செயலாக நடப்பதே இதில் எந்தவித கற்பிதங்களையும் கொள்ள வேண்டாம் என்றார்.
எளிய வழியில் மக்களுக்குச் சேர நிறைய எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், புறநானூறு, திருக்குறள். மற்றும் சிறுகதை எழுதுவது எப்படி?, திரைக்கதை எழுதுவது எப்படி ? என்று எளிய முறையில் பயிற்றுவிக்கும் நூல்களும் தந்துதவினார். அவரின் வாசகர்கள் அவருடன் தேடி உறவாடுவதும், கோபித்துக் கொள்வதும், அன்பு பாராட்டுவதும் என நடந்தேறியுள்ளது. ஒருவர் அவர் இல்லம் தேடிச் சென்று உங்களின் அனைத்து கதைகளும் பிரசுரம் ஆகிறது என்னோடது என் ஆகவில்லை படித்துக் கூறுங்கள் என்றாராம் அது ஒரு காதல் கதை அதில் போதிய வர்ணனைகள் இல்லாததால் நீங்கள் காதலித்து இருக்கிறீர்களா? என்றார் சுஜாதா அவர் இல்லை என்றதும். காதலித்துவிட்டு வந்து எழுதுங்கள் என்றார்.
அதன் பின் இவர் சொல்கிறார் He had the last word என்று "நீங்கள் கூடத் தான் கொலைகளைப்பற்றி கதை எழுதுகிறீர்கள்".
ஒருவருடன் உரையாடியதைக்கூட அவ்வளவு அழகாக வடிப்பார். ஒரு புதுமண தம்பதிகளை நலம் விசாரித்ததில் அந்த மாப்பிள்ளை மிகவும் அலுத்துக்கொண்டார் அவருக்கு எப்பொழுதும் கைகளை நடுவில் இடுக்கி கொண்டு சுருண்டு படுப்பதுதான் பழக்கமாம் இப்பொழுது முடியவில்லை என்று. அதற்கு அவர் 'உங்கள மாதிரி ஆளுங்கதான் சார் இப்படியெல்லாம் எழுதிடுறீங்க ஈர் உடல் ஓர் உயிர்ன்னு' என்றார். பெரும்பாலான ஆண்கள் அப்படிப் படுப்பதற்கான உளவியல் காரணத்தைக் கூறிவிட்டு. 'அது நான் இல்லப்பா சினிமா பாடல் ஆசிரியர்கள்ன்னு சொன்னேன்'. 'ஒரு வேலை அவர்களுக்கு இந்த பழக்கம் இல்லையோ என சொல்லிப்பார்த்தேன்' என்றார். அவரின் முதல் கதை வெளியான அனுபவத்தை ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் கதைகளில் வரும் . அவர் வீட்டின் அருகே இருக்கும் கடையில் அவ்வளவு துரிதமாகப் புத்தகங்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டது எனில் அனைத்தையும் நானே வாங்கிவிட்டேன் என்பார்.
இம்மாதிரி கலந்து கட்டிய காக்டெயில் சுஜாதா. என்னதான் ஜெயகாந்தன், ஜெயமோகன், கல்கி, ஜானகிராமன் என்று படித்தாலும் அடுத்த வீட்டுக் குழந்தைகளை எவ்வளவு கொஞ்சினாலும் மீண்டும் நம் வீட்டுக் குழந்தையை கொஞ்சும் பொழுது ஒரு சகம் வரும் பாருங்க அதுமாதிரி மனம் சுஜாதாவிடம் வந்து நின்றுவிடுகிறது. ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு sapiosexual என்று. Yes. I love him because, of his intelligence.
-சுபாஷினி