தமிழ்பாற்கடலில் சிறு மீனென
நீந்தித் தமிழ் அறிய
முற்படும் திறக்காத சிப்பியாக.
சொற்களில் உலாவிப்
பொருட்களில் புதைந்து
இலக்கியத்தில் அயர்ந்து
எழுத்துருவங்களில் இயைந்து
சொல்லாடலில் இசைந்து
அதன் தன்மையில் நெகிழ்ந்து
புலன்களைப் புணர்ந்து
எங்குதான் இட்டுச் செல்கிறது
இம்மொழி?
பைந்தமிழ்
பாவலர்தமிழ், செந்தமிழ்
என்று எத்துணை
பெயர்களில் அழைத்தாலும்
எதிலும் அடைத்துவிட முடியாது
ஒளியின் துகளென
நின்தமிழ் நிற்கும்
தூணாக நூற்றாண்டு
அழிவுகளைத் தாண்டி
இடரேதும் இல்லாமல்
தாவரங்களினூடே
ஊடுருவிச் செல்லும்
காற்றென நுழைந்து
எங்கும் நிறைந்திருக்கும்
பிறை நிலவென.
கல் தோன்றி , மண் தோன்றா
காலத்தில் தோன்றிய
தமிழென்பது என்ன
விண் சென்று நிலவில்
குடிபுகுந்தாலும்
நின்றாளும் எம்தமிழ்
பருகப் பருக
முடியாத மிடறாகச்
சுரந்துக் கொண்டே
இருக்கும் செழித்த
தாயின் முலைப்பால்போல்
செருக் உண்டு எனக்கு
தமிழ் குடித்து
இளைப்பாறியதால்
மிடுக்கும் உண்டு
தமிழ் உண்டு வளர்ந்ததால்
சுருங்கச் சொன்னால்
தமிழ் வாசித்தல்
ஒரு சுய இன்பம்.
#தாய்மொழிதின #நல்வாழ்த்துகள்
#சுபாஷினி
நீந்தித் தமிழ் அறிய
முற்படும் திறக்காத சிப்பியாக.
சொற்களில் உலாவிப்
பொருட்களில் புதைந்து
இலக்கியத்தில் அயர்ந்து
எழுத்துருவங்களில் இயைந்து
சொல்லாடலில் இசைந்து
அதன் தன்மையில் நெகிழ்ந்து
புலன்களைப் புணர்ந்து
எங்குதான் இட்டுச் செல்கிறது
இம்மொழி?
பைந்தமிழ்
பாவலர்தமிழ், செந்தமிழ்
என்று எத்துணை
பெயர்களில் அழைத்தாலும்
எதிலும் அடைத்துவிட முடியாது
ஒளியின் துகளென
நின்தமிழ் நிற்கும்
தூணாக நூற்றாண்டு
அழிவுகளைத் தாண்டி
இடரேதும் இல்லாமல்
தாவரங்களினூடே
ஊடுருவிச் செல்லும்
காற்றென நுழைந்து
எங்கும் நிறைந்திருக்கும்
பிறை நிலவென.
கல் தோன்றி , மண் தோன்றா
காலத்தில் தோன்றிய
தமிழென்பது என்ன
விண் சென்று நிலவில்
குடிபுகுந்தாலும்
நின்றாளும் எம்தமிழ்
பருகப் பருக
முடியாத மிடறாகச்
சுரந்துக் கொண்டே
இருக்கும் செழித்த
தாயின் முலைப்பால்போல்
செருக் உண்டு எனக்கு
தமிழ் குடித்து
இளைப்பாறியதால்
மிடுக்கும் உண்டு
தமிழ் உண்டு வளர்ந்ததால்
சுருங்கச் சொன்னால்
தமிழ் வாசித்தல்
ஒரு சுய இன்பம்.
#தாய்மொழிதின #நல்வாழ்த்துகள்
#சுபாஷினி
No comments:
Post a Comment