அக்குபஞ்சர் நீடிலா
துருகி சிக்கன் நூடுலா
அன்பே ஆடை கொஞ்சும்
உந்தன் இடையிலா...
தீனா படத்தில் வரும் காதல் வெப்சைட் ஒன்று பாடலின் வரிகள் எழுதியவர் சாட்சாத் வாலியேதான்.. ஒவ்வொரு வரிக்கும் டெக்னிக்கல் அப்டேட்வரை கொடுத்திருப்பார்.. யுவன் இசை அப்படியே துள்ளலில் வைத்திருக்கும். தீனா படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட். அப்பொழுது ஏழாவது அல்ல எட்டாவது தான் படித்துக் கொண்டிருந்த ஞாபகம். அன்றைய தினத்தில் சிடி வாங்கி தான் படங்களைப்பார்ப்பது. திருட்டு விசிடி
தான் சந்தேகமே வேண்டாம். நல்ல ப்ரிண்டாக இருந்துவிட்டால் சாப விமோசனம் தான்.
இப்படத்தில் இன்னொரு பாடல் உண்டு.. சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்.. அதில் சில வரிகள் உண்டு விஜய்சாகர் எழுதியது
காதலிருக்கும் பயத்தினில்தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தான் அலைவான் வீதியிலே..
இதற்கு என் நண்பர் ஒருவரின் வீட்டில் கடும் கண்டனங்கள் என்று அவர் சொன்னார். 'அது எப்படி கடவுளை இப்படி கேவலமான சித்தரிக்கலாம்?' அவர் கிறிஸ்தவ மதத்தை (எந்த மதமாக இருந்தாலும் சரி) சேர்ந்தவர். எனக்கு அப்பொழுது தோன்றியது இதில் என்ன இருக்கு.. இதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகுறாங்க? கடவுள்தானே இருந்துட்டுப் போகட்டும் என்று. அவர் மேலும் சொல்லுவார் 'எங்க அண்ணன் எல்லாம் அழுது ஜெபம் படிப்பார் 'என்று. இதுவும் புரிந்ததில்லை கடவுளை வேண்டும் போது எதற்கு அழனும்? இதெல்லாம் அப்பொழுதே எழுந்த கேள்விகள்தான்... அப்பவே கொஞ்சம் யோசிக்க பழகியிருக்கேன். பின் வருவது இப்போதைய கேள்விகள். எப்படியும் நாம அழுது, துக்கப்பட்டு, துயரப்பட்டு எல்லா பட்டுவையும் பார்த்திருப்பார் தானே? ஒருவேளை இருந்தால். அப்புறம் எதுக்கு தனியா வேற அழனும்?
சரி அப்படியே தன்னுடைய கஷ்டங்களை சொல்லும் போது அழுகை வந்துவிடுகிறது என்று ஒரு லாஜிக்கை வைத்துக்கொண்டாலும். அவர் அண்ணன் என்று சொல்லிய நபர் கல்லூரி கூட சேரவில்லை என்பதாக ஞாபகம். இவருக்கு என்ன மீளாத் துயர்? அப்புறம் எதற்காக இப்படிப் பொங்க வைக்க வேண்டும்? விளங்கவில்லை.
சரி திரும்ப நாம பாட்டுக்கு வருவோம்.. என் நெஞ்சில் mingle ஆனலே பாடலில்
ஒன் வேயில் தனியாக இருந்தனே
இனி ரன் வேயில் ஜெட்டாக பறப்பனே
காலம் பூராவும் காதல் போராவும்
கூடி வாழும் அன்பே..
துருகி சிக்கன் நூடுலா
அன்பே ஆடை கொஞ்சும்
உந்தன் இடையிலா...
தீனா படத்தில் வரும் காதல் வெப்சைட் ஒன்று பாடலின் வரிகள் எழுதியவர் சாட்சாத் வாலியேதான்.. ஒவ்வொரு வரிக்கும் டெக்னிக்கல் அப்டேட்வரை கொடுத்திருப்பார்.. யுவன் இசை அப்படியே துள்ளலில் வைத்திருக்கும். தீனா படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட். அப்பொழுது ஏழாவது அல்ல எட்டாவது தான் படித்துக் கொண்டிருந்த ஞாபகம். அன்றைய தினத்தில் சிடி வாங்கி தான் படங்களைப்பார்ப்பது. திருட்டு விசிடி
தான் சந்தேகமே வேண்டாம். நல்ல ப்ரிண்டாக இருந்துவிட்டால் சாப விமோசனம் தான்.
இப்படத்தில் இன்னொரு பாடல் உண்டு.. சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்.. அதில் சில வரிகள் உண்டு விஜய்சாகர் எழுதியது
காதலிருக்கும் பயத்தினில்தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தான் அலைவான் வீதியிலே..
இதற்கு என் நண்பர் ஒருவரின் வீட்டில் கடும் கண்டனங்கள் என்று அவர் சொன்னார். 'அது எப்படி கடவுளை இப்படி கேவலமான சித்தரிக்கலாம்?' அவர் கிறிஸ்தவ மதத்தை (எந்த மதமாக இருந்தாலும் சரி) சேர்ந்தவர். எனக்கு அப்பொழுது தோன்றியது இதில் என்ன இருக்கு.. இதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகுறாங்க? கடவுள்தானே இருந்துட்டுப் போகட்டும் என்று. அவர் மேலும் சொல்லுவார் 'எங்க அண்ணன் எல்லாம் அழுது ஜெபம் படிப்பார் 'என்று. இதுவும் புரிந்ததில்லை கடவுளை வேண்டும் போது எதற்கு அழனும்? இதெல்லாம் அப்பொழுதே எழுந்த கேள்விகள்தான்... அப்பவே கொஞ்சம் யோசிக்க பழகியிருக்கேன். பின் வருவது இப்போதைய கேள்விகள். எப்படியும் நாம அழுது, துக்கப்பட்டு, துயரப்பட்டு எல்லா பட்டுவையும் பார்த்திருப்பார் தானே? ஒருவேளை இருந்தால். அப்புறம் எதுக்கு தனியா வேற அழனும்?
சரி அப்படியே தன்னுடைய கஷ்டங்களை சொல்லும் போது அழுகை வந்துவிடுகிறது என்று ஒரு லாஜிக்கை வைத்துக்கொண்டாலும். அவர் அண்ணன் என்று சொல்லிய நபர் கல்லூரி கூட சேரவில்லை என்பதாக ஞாபகம். இவருக்கு என்ன மீளாத் துயர்? அப்புறம் எதற்காக இப்படிப் பொங்க வைக்க வேண்டும்? விளங்கவில்லை.
சரி திரும்ப நாம பாட்டுக்கு வருவோம்.. என் நெஞ்சில் mingle ஆனலே பாடலில்
ஒன் வேயில் தனியாக இருந்தனே
இனி ரன் வேயில் ஜெட்டாக பறப்பனே
காலம் பூராவும் காதல் போராவும்
கூடி வாழும் அன்பே..
சார் வாலி சார்.. ❤️
No comments:
Post a Comment