எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் 23 அல்லது 25 வயது உடையவர். அவர் சுயதொழில் செய்துதான் தன் குடும்பத்தைப் பார்த்து வருகிறார். அதற்கு முன் அப்பெண்ணின் அக்கா பார்த்தார் அவர் கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டதால் இப்பொழுது இப்பெண். இவர்களுக்கு ஒரு தம்பி உண்டு இந்த இளைய பெண்தான் தன் தம்பியை எம்.ஏ வரை படிக்க வைத்தார். அவரின் தம்பிக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தால் அப்பெண் குடும்பம் கொஞ்சம் தழைக்கும். தம்பி பேராசிரியர் தேர்வு எழுதி வெற்றி பெற்றார் ஆனால், அரசு வேலை கிடைக்கவில்லை. அவர்கள் OC பிரிவைச் சேர்ந்தவர்கள். எனக்கு அந்த வேலையைச் சார்ந்த தகவல் தெரியாது. அப்பெண் என்னிடம் SC பிரிவைச் சேர்ந்தவர்களுக்குக் குறைந்த வருட அனுபவமே போதும் அரசு வேலை கிடைப்பதற்கு எங்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. இதனால் இந்த SC பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் இப்பொழுது அனைத்து இடங்களிலும் நன்றாக இருக்கின்றனர் எங்களைப் போன்றவர்களுக்கு இதுதான் நிலைமை என்றார்.
என்னால் முடிந்த வரை இட ஒதுக்கீடும், சாதி அரசியலும் சமூகத்தில் அதன் தாக்கமும் எனச் சொல்லிப்பார்த்தேன். உயர் சாதி ஏழ்மையில் கூட இருந்துவிடலாம். ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மென்மை நிலையிருந்தாலும் அங்கும் ஒடுக்கப்படுவர் என்றேன். ஒருவாறாக தலையாட்டி வைத்தார். அவருக்கு அவர் தம்பிக்கு வேலை கிட்டவில்லை என்ற ஆதங்கம்.
பேசியதை வேறு ஒருவருடன் பகிர்ந்த போது அதற்கு அவர் "ஏதோ அந்த பொண்ணு தன் தம்பிக்கு வேலை கிடைகிலன்ற கஷ்டத்தில் சொல்லியிருக்கு. அவ கிட்ட போய் அரசியல் கதை பேசிட்டு வந்திருக்கையே?" அப்படியென்றார்.
எனக்கும் கொஞ்சம் நெருடல் வந்தது தேவையில்லாமல் பேசிட்டனோ என்று. மீண்டும் ஒரு வாரம் கழித்து அவரை சந்திக்கும் போது அவர் ஒரு குட்டி கதை சொன்னார் எனக்கு.
"ஒரு விசேஷமான கோயில் அக்கா அது. நாமம் போட்டுயிருந்த ஒரு பெரியவர் போய் அந்த கோயில் பூசாரிகிட்ட எனக்கு ஒரு எலிமிச்சை பழம் வேணும்ன்னு கேட்டார் அதுக்கு அந்த பூசாரி காசு குடுத்தா குடுப்பன்னு சொன்னார். பத்து ரூபா குடுன்னார். இந்த பெரியவர் காசில்லைன்னார். ஆனால், பழம் வேணும்ன்னார். அந்த பூசாரி முடியாதுடார். அதுக்கு இந்த பெரியவர் வெளியே வந்தபடியே அவர் இஷ்டபடி திட்டிட்டே வராரு 'இதுக்குதான் கண்ட கண்டவனெல்லாம் பூசாரியாகப் போடக்கூடாது. இப்படி இவனுங்கள எல்லாம் உள்ள விட்டதால்தான் இப்படி இருக்கு.' அப்படி இப்படின்னு சகட்டுமேனிக்கு திட்டுறார் அக்கா. எத்தனை அயிர்ங்க காசு போட்டாதான் திறுநீரே தராங்க. அப்பத்தான் அக்கா நீங்க சொன்னது எனக்கு புரிஞ்சது. எவ்வளவு உண்மை நீங்கச் சொன்னது".
எனக்கு நெருடல் மறைந்து நெஞ்சம் நிறைந்தது.
என்னால் முடிந்த வரை இட ஒதுக்கீடும், சாதி அரசியலும் சமூகத்தில் அதன் தாக்கமும் எனச் சொல்லிப்பார்த்தேன். உயர் சாதி ஏழ்மையில் கூட இருந்துவிடலாம். ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மென்மை நிலையிருந்தாலும் அங்கும் ஒடுக்கப்படுவர் என்றேன். ஒருவாறாக தலையாட்டி வைத்தார். அவருக்கு அவர் தம்பிக்கு வேலை கிட்டவில்லை என்ற ஆதங்கம்.
பேசியதை வேறு ஒருவருடன் பகிர்ந்த போது அதற்கு அவர் "ஏதோ அந்த பொண்ணு தன் தம்பிக்கு வேலை கிடைகிலன்ற கஷ்டத்தில் சொல்லியிருக்கு. அவ கிட்ட போய் அரசியல் கதை பேசிட்டு வந்திருக்கையே?" அப்படியென்றார்.
எனக்கும் கொஞ்சம் நெருடல் வந்தது தேவையில்லாமல் பேசிட்டனோ என்று. மீண்டும் ஒரு வாரம் கழித்து அவரை சந்திக்கும் போது அவர் ஒரு குட்டி கதை சொன்னார் எனக்கு.
"ஒரு விசேஷமான கோயில் அக்கா அது. நாமம் போட்டுயிருந்த ஒரு பெரியவர் போய் அந்த கோயில் பூசாரிகிட்ட எனக்கு ஒரு எலிமிச்சை பழம் வேணும்ன்னு கேட்டார் அதுக்கு அந்த பூசாரி காசு குடுத்தா குடுப்பன்னு சொன்னார். பத்து ரூபா குடுன்னார். இந்த பெரியவர் காசில்லைன்னார். ஆனால், பழம் வேணும்ன்னார். அந்த பூசாரி முடியாதுடார். அதுக்கு இந்த பெரியவர் வெளியே வந்தபடியே அவர் இஷ்டபடி திட்டிட்டே வராரு 'இதுக்குதான் கண்ட கண்டவனெல்லாம் பூசாரியாகப் போடக்கூடாது. இப்படி இவனுங்கள எல்லாம் உள்ள விட்டதால்தான் இப்படி இருக்கு.' அப்படி இப்படின்னு சகட்டுமேனிக்கு திட்டுறார் அக்கா. எத்தனை அயிர்ங்க காசு போட்டாதான் திறுநீரே தராங்க. அப்பத்தான் அக்கா நீங்க சொன்னது எனக்கு புரிஞ்சது. எவ்வளவு உண்மை நீங்கச் சொன்னது".
எனக்கு நெருடல் மறைந்து நெஞ்சம் நிறைந்தது.