Monday, May 13, 2019

உறியடி -2

இம்முறை உறியடி 2 திரைப்படத்தில் எடுத்திருக்கும் விஷயம் ஆலைகளின் நச்சு வாயு வெளியேறி கிராம மக்களைப் பலி வாங்குவது. வழக்கம்போல் இவர்களின் சாதி அரசியலும், பிணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதென அத்தனையும் உண்மையின் புகைப்படம்.

இவ்வளவு உண்மை எடுக்காதீங்கய்யா அழுக வருது. அந்த நச்சுக் காற்றைச் சுவாசித்து மக்கள் மடிவதும். ஆலையத்தில் போதிய பாதுகாப்பு வசதி இன்மையால் அதற்கு முன் ஊழியர்கள்  இறப்பதும் பற்றி எரியும் சுயநலவாதிகளின் ஆதிக்கம். நிஜத்தைத் தொட்டுச் சாப்பிட்டது உண்டா நிறையக் கசக்கும் கொஞ்சமாகக் காரம் சமயத்தில் புளிக்கும் அப்படிதான் இருந்தது.

வேறு ஏதுவாக இருந்தாலும் கொஞ்சம் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். சுவாசிக்கும் காற்றில் என்றால் என்னதான் செய்ய முடியும்? ஒரு அம்மா தன் கை குழந்தையை எங்கு வைத்து மூடி காப்பதெனப் பதறும் அந்த காட்சி நிர்மூலம். இறுதியாக ஒரு அலமாரியில் வைத்து மூடுவார். மூடப்படும் அக்கதவின் பக்கத்தில் ஸ்ரீஸ்டி வரைந்திருக்கும். ஒரு வசனம் வரும் "நீ என்ன வேண்டிக்கிட்ட சாமிகிட்ட" அதற்கு விஜய் குமார் சொல்வார் "நீ நிஜமா இருக்கனும்ன்னு, ஏன்னா எவ்வளவு பேர் உன்ன நம்பிட்டு இருக்காங்க" அப்படியென்று.

எனக்கு எதற்கு அரசியல்  அப்படி என்று சொல்பர்களுக்குத்தான் இப்படம். ஆமாம் "அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால் , அரசியல்  உங்கள் வாழ்க்கையில் தலையீடும்" .

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடைய
வைத்தேன்!

வெந்து தணிந்தது காடு

தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும்
உண்டோ?" 🔥🔥🔥

No comments:

Post a Comment