Monday, May 13, 2019

நாம சொன்னா யார் கேட்பா

பொள்ளாச்சி வன்கொடுமை பற்றிய உரையாடலில். நான் நண்பருடன் பகிர்ந்தது "முதலில் பிள்ளைகளுடன் முடிந்தவரை உரையாடுங்கள். அவர்களுக்கான ஸ்பேஸ் கொஞ்சம் கொடுங்கள். மற்றும் நீங்கள் தர வேண்டிய துணிவு என்பது அவர்களுக்கு "நீ என்ன தப்பு வேணும்னாலும் செய்யலாம். ஆனா, அதை தைரியமாக என்கிட்ட சொல்லனும். அப்படி என்கிட்ட சொல்ல முடியாத தப்புன்னா அதை நீ செய்யாத" என்பதாக இருக்கவேண்டும்  என்றேன்.

இதையே சில காலம் முன்பு கொஞ்சம் மாற்றி வேறு மாதிரி ஒரு மேடையில் பேசியிருந்தார் கரு. பழனியப்பன்  அந்த காணோளி இப்பொழுதுதான் காண நேர்ந்தது. இதையே நான்சொன்னா யாரு கேட்குறா?

இங்கு ஒரு விஷயம்  யாரால் சொல்லப்படுகிறது..மற்றவர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதே இங்கு மிகப்பெரிய அரசியல்.  இதையும் நான்சொன்னா  யார் கேட்பா?

No comments:

Post a Comment