Friday, October 5, 2018

பரியேறும்பெருமாள்

ஒரு சில படங்களின் தேவை எப்பொழுதும் இருந்துக்கொண்டே இருக்கும் அதுப்போன்ற படம்தான் பரியேறும்பெருமாள். சாதியை மையமாகக் கொண்டு இயங்கும் சமூகத்தை அப்பட்டமாக காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ். எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால், அதை எப்படி உள்வாங்கி கொடுத்திருக்கிறார் என்பதே நம்மை கவனிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறது.

பரியேறும்பெருமாளின் பாத்திரப்படைப்பு அற்புதமாக வார்க்கப்பட்டுள்ளது. தலித் இனத்தை சேர்ந்தவர் என்பதனால் முதலில் விலகுவதும் , பிறகு எதிர்த்து நின்று சவால்களை எதிர்க்கொள்வதும் என வாழ்வியல் எதார்த்தங்கள். பெண் வேடமிடும் தன் அப்பாவை மறைப்பதும் பின்பு அவரையே கூட்டி வந்து நிற்பதுமென பாத்திரத்தின் உணர்வுகளை வலுச்சேர்க்கிறது. ஜோவாக வரும் ஆனந்தியின் அப்பா உயர்சாதி பிரிவினரின் அப்பாவை கண் முன் நிறுத்தியிக்கிறார்.

திரைப்படத்தின் தொடக்க காட்சியிலே கருப்பி என்னும் நாய் கொல்லப்படுவதை காட்சிப்படுத்தி. முழுகதையின் வடிவத்தை தந்திருக்கிறார் மாரி. அந்த கருப்பியின் தடம் படம் முழுவதும் தொடரும். ஒரே பின்னணி கொண்ட வேவ்வேறு செய்திகளை நாம் எப்படி கடக்கிறோம் என்று அசால்டாக காட்டியிருக்கிறார். இதிலிருந்து வேறுபடுபவர்களுக்கு என்ன இது படம் முழுவதும் விரட்டிக்கொண்டே இருக்கிறார்கள் என தோன்றலாம். அவர்களின் வாழ்வியலே வாழ்க்கை முழுவதும் விரட்டி அடிக்கப்படுவதேயாகும்.

கொலைக்கு உள்ளாவது தலித் இன மக்கள் அல்ல சமூக நீதியே. அம்பேத்கரை உயிர்த்திபிடித்து. கதாநாயகன் வசனத்திலே 'நான் டாக்டர் அம்பேத்கர் ஆவேன்'  என்று வைத்திருப்பதெல்லாம் நல்ல முயற்சி.  ஒரு சில விஷயங்களை தவிர்த்திருக்கலாம்  கதாநாயகனின்  அப்பாவை நிர்வாணப்படுத்தி ஓடவிடுதல், வகுப்புக்கு மது அருந்திவிட்டு வருதல் என. இவ்வுளவுக்கும் இடையில் ஒரு மெல்லிய காதலை சொல்லிருக்கும் விதம் அழகு.

கதாநாயகன் கதிர் ஜோவாக வரும் ஆனந்தியின் அப்பாவிடம் பேசும் அந்த இறுதி வசனமும்  சரி அதற்கு முன்பு பேசப்படும் வசனமும் சரி பொருள் புதைந்திருக்கும் தன்மை நேர்த்தி. உண்மையை சொல்ல வேண்டுமென்றால்  இப்படத்தில் சாதியே கதாநாயகன் மற்றும் பேசும் பொருள். சற்றும் பசப்பாமல் நேராக தலித் இன மக்களின் இன்னல்களை வடித்துள்ளார் மாரி.

கருப்பி பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது திரை விலகிய பின்னும். சந்தோஷ் நாராயணின் இசை மக்களுக்கான இசை. இப்படத்தை தயாரித்து மீண்டும் தன் நிலைப்பாட்டை  உறுதிப்படுத்துள்ளார் பா.ரஞ்சித். பரியேறும்பெருமாளுக்கு நீங்கள் கரம் கொடுக்க வேண்டாம் வழிவிடுங்கள் போதும் அவன் தானே மேலே வருவான்.

#பரியேறும்பெருமாள்

ஆர்டிகள் 497

திருமணத்துக்கு வெளியேயான உடலுறவு குற்றமில்லை என்ற தீர்ப்பை   எதிர்ப்பவர்களுக்கெல்லாம் திருமண  உறவைப்பற்றிய சரியான புரிதல் இல்லை என்றே கருத தோன்றுகிறது. மேலும் நீதிபதிகள்
நீக்கிய 497 சட்டப்பிரிவின் படி கல்யாணம் ஆன  பெண்ணுடன் அவளின் கணவருக்கு தெரியாமல் உறவு வைத்துக் கொள்ளும் ஆணுக்கு மட்டும் தண்டணை ஐந்து வருடம் சிறை அல்லது அபராதம்.அப்பெண் கணவனுக்கு தெரிந்து வைத்துக்கொண்டால் தவறில்லை என்பது அந்த பெண்ணை அசையும் சொத்தாக கணவர் பாவிப்பதையே குறிக்கிறது . மற்றும்  அதே கணவன் உறவுக்கொண்டிருந்தால் மனைவி 
 முறையீடு செய்ய முடியாது .என்றுதான் அதை நீக்கி உள்ளனர். கணவன்மார்கள் தங்கள் மனைவிகளுக்கு எஜமானர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது  என்றே சூளுரைத்திருக்கிறார்கள் இந்த தீர்பில். 150 ஆண்டுக்கால பழைமையான ஆண் ஆதிக்க சட்டத்தை நீக்கியது நல்ல முடிவு. 

இருவரின் பரஸ்பர ஒப்புதலோடு நடக்கும் உறவு எப்படி குற்றமாகும். தீர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக் கொள்ளுதல் மகிழ்ச்சியற்ற திருமண  உறவையே குறிக்கிறது என்று. இதற்கு தண்டிக்க வேண்டிய அவசியமில்லை.  வேண்டுமானால் இதை காரணம் காட்டி விவாகரத்து செய்து கொள்ளலாம். வெளியான தீர்பை பெரும்பாலும் தவறாக புரிந்துக்கொள்கின்றனர். ஓரினச்சேர்க்கை தீர்ப்பை அடுத்து மற்றுமொரு  வரவேற்க வேண்டிய தீர்ப்பு. 

#AdulteryVerdict

Sunday, June 10, 2018

காலா - கருப்பு நெருப்பு



'காலா' பற்றி என்னளவிலான புரிதல். உண்மையில் தற்கால அரசியலின் வேர்வரை எடுத்துரைத்தற்காகவே இயக்குனர் ரஞ்சித்தை வரவேற்கலாம். 


திரைப்படத்தின் தொடக்க காட்சியே போராட்டமாக அமைத்திருப்பதே ஒரு நல்ல தொடக்கம். வழக்கமான நில உரிமை கோருதலும் அதற்கான விளைவுகளும்தான் என்றாலும் மிக துள்ளியமாக இதை அரசு என்னும் அதிகார வர்க்கம் எப்படி நகர்த்துகிறது என்பதை போட்டு உடைத்திருக்கிறார்.

'மனு' என்னும் கன்ஸ்ட்ரக்ஷன்,  மனு தர்மத்திற்கு  எதிரான வசனங்கள்,  கருப்பு உடை , ஒரு பெண்ணின் ஆடை உருவியப்பின்னும் அப்பெண்  போலிசை எதிர்த்து அடிப்பது, இறுதியில் பூமி பூஜை போட வரும்பொழுது வண்டிகளின் எதிரில் அதவாது தாராவியில் பெரியார் சிலை இருப்பது என பெரியாரியத்தை நிலைநாட்டியுள்ளார்.


இந்த இடத்தை விட்டு போகிறோம் என்று காலாவின் மகன் கூறுகையில் ..காலாவின் வசனம் அருமை..'இந்த இடத்தை விட்டு போய்டா எல்லாத்தையும் மாத்திட்டா மறந்துட்டா மட்டும் சந்தோஷமாக வாழ்ந்துடுவியா'. வசனங்களும் நன்றாக கூர்மையாக இறக்கியிருக்கிறார். ஃபாஸிசம் பற்றி ஹுயுமா பேசுவது.மனுதர்மத்தை பற்றி ஹரிதேவ் வீட்டில் காலா பேசுவது மற்றும் 'நிலம் உங்களுக்கு அதிகாரம் . நிலம் எங்களின் உரிமை' போன்ற வசனங்கள்  ஐஸ்கிரீம் டாப்பிங்ஸ்.


மூன்று நிறங்களை கையாண்டு இருக்கிறார் கருப்பு, நீலம், சிவப்பு. .பெரியாரியம், அம்பேத்கர், மார்க்சிஸம். இந்து, முஸ்லிம் பிரிவினையை உண்டு செய்வது. தற்கால சர்கார் மேற்கொண்டிருக்கும் 'கிளீன் இந்தியா' திட்டத்தை கிழித்திருப்பது என வழியெங்கும் அரசியல். வறுமையை ஒழிக்கிறோம் என்று வறுமையானவர்களை ஒழிக்கும் திட்டமும் அதன் செயல்களையும் அப்பட்டமாக வடித்துள்ளார்.


இப்படத்தில் ரஜினி ஏற்றிருக்கும் காதாபாத்திரத்தை அழகிலோடு வெளிப்படுத்திருகிறார். தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் ஒரு அசைக்க முடியாத பின்பம் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது. அசாத்திய நடிப்பு மனைவிடம் கெஞ்சுவதும், காதலியிடம் குழைவதும் என. மகன்களிடம் கோபப்படுவது, சிறைச்சாலையில் 'குமாரு யார்  இவரு' என்னும் பொழுது திரையரங்கமே அதிர்கிறது.பழைய காதலியை பார்த்து பதட்டம் அடையும் சமயம். சின்ன சின்ன உணர்வுகளை அழகாக கடத்துகிறார்.


அவருக்கு நடிப்பிலும் இணை கொடுத்துள்ளார் ஈஸ்வரி ராவ் செல்வி என்ற காதாப்பாத்திரத்தை ஏற்று. ஐ லவ் யூ என்றவுடன் பனியாய் உருகுவதும் . கணவனின் காதலி விஷயத்தில் பொங்குவதும் என்ன பொளந்து கட்டியிருக்கிறார். ஹுயுமா குரேஷியும் சொல்லும்படியாக நடித்திருக்கிறார். சமுத்திரகனி வழக்கமாக அவர் நடிப்பில் அவர் தனியாக மின்னுகிறார். மகாராஷ்டிரா பெண்ணாக சாருமதி கதாபாதாதிரத்தில் வரும்  பெண் கவர்கிறார் . இம்மாதிரி பெண்களைத்தான் பாரதியும், பெரியாரும்  தேடிக்கொண்டிருந்தது. மனதில் நிற்கிறார் அப்பெண்.


இவ்வுளவு நல்ல விடையங்களுக்கு மத்தியில் சில லாஜிக்கள் ஓட்டைகளும் இருக்கிறது. காலா கேரக்டரை அத்துணை சரியாக வடிவம் பெறவில்லை. காலா நில  அபகரிப்பை எதிர்ப்பதை தவிர வேறு ஒன்றும் செய்தபாடில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக சில கேள்விகள் தொக்கி நிற்கின்றன.  சந்தோஷம் நாராயணனின் வாழ்வியல் இசை இசையந்தாடுக்கிறது. தேவையான அளவு உப்பு போல் தேவையான அளவு பாடல் சேர்க்கப்பட்டுள்ளது.


இதில் இன்னொரு மகிழ்ச்சிகரமான விஷயம் என்னவெனில் மெர்சல் திரைப்படத்தில் GST பற்றி ஒரே வசனம் பேசியதற்கு பொங்கிய பாஜாகாவால் இப்படத்தில் ரஜினி நடித்திருப்பதால் பஃப்ளிக் டாய்லேட்டில் இருப்பதுப்போல் உள்ளேவும் இருக்க முடியவில்லை வெளியெறவும் முடியவில்லை. தற்கால  அரசியலும்,  அரசியல்வாதிகளையும் கண் முன் நிறுத்தியதற்காகவும். சாதி, மத பிரிவினைகள். வர்க்க  பிரிவினைகள். பாஜக,  ஆர்.எஸ்.எஸ் போன்றவற்றை துகிலுரித்து காட்டியதற்காகவும். தாராளமாக கொண்டாடலாம் காலாவை காலம் தாழ்த்தாமல். #காலா

Saturday, June 9, 2018

என் கீச்சுகளின் தொகுப்பு

அமைதியாக இருப்பது மாபெரும் தவம்.  ஆகச்சிறந்த  அவஸ்தை.

புனைவுகள் எது நிஜம்  எது என்று தெரியாதளவு கலந்திருப்பதுதான் இந்த வாழ்க்கையின் சாராம்சம்.

அன்பு அனைத்தையும் சூறையாடிவிட்டு உயிரை மட்டும் விட்டுவிடும்.

முடியாத நேரத்தில்
எல்லாம் முடிந்து விடுவதுதான்
முடிவிலியின் இயல்பு

உவர்பும் இனிப்பாக
மாறும் தருணம்
உண்டு.

அன்பு என்பது வேறு தன்மானம் என்பது வேறு என்பது பலப்பேருக்கு இங்கு புரிவதில்லை.

என்ன இப்படி மாறிட்ட என்பவர்களுக்கு காலத்தின் வலிமைப்பற்றி புரிவதில்லை.

நீங்கள் ஏமாற்றம் அடைவில்லை என்பது உண்மையல்ல  இன்னும் அத் தருணம்  உங்களுக்கு வாய்க்கவில்லை என்பதே உண்மை.

ஓர் விஷயத்தில் தீர்வு காணாமல் அதை தள்ளிப்போடுவது.. ஆண்களுக்கு ஓர் அலாதி.

‪கோடையை தணிக்கும்‬
‪உன் ஒற்றை முத்தம். ‬
அடையாள அட்டைகளிள்
நம் அடையாளத்தை
தேடுவதே அதன் சிறப்பு.

சேர்க்காமல் விட்ட
புள்ளிகள்தான்
பின்னால் கேள்விகளாய்
தொடர்கின்றன.

புத்தகம் படிக்கும் பொழுது வார்த்தைகளாய் மாறிவிடுவதுதான் அதன் சிறப்பு.

யாருக்காகவும் காத்திருக்காத
தருணங்கள்
வலி மிகுந்தவை.

ஒரு பொண்ணு மேல் கடுப்பாகிட்டா அவ கேரக்டரை தப்பா பேசுவதை முதல்ல நிறுத்துங்கடா இந்தியா வல்லரசாகிடும்.

அறிவீனங்களின் ஆரம்பம்
அன்பு பெருகுமிடம்.

Most of the foolish would think they’re wise.

பெண்ணியம் என்பது எப்படி திருப்பினாலும் நம்மை குத்தும் ஒர் ஆயுதம்.

‪நாம செத்தா நாலு பேர் அழுகனும்ன்னு நினைக்கறவங்களவிட.. எவன் செத்தா நமக்கென்ன என்பவனுங்கதான் அதிகம் இருக்கானுங்க. #டிசைன் ‬

அழகு ஓர் முகத்திரை
அன்பு ஓர் முகம்

உளறுகிறேன் என்றுதான் உண்மையை சொல்ல வேண்டி இருக்கிறது.


ஒரு காலத்தில் நமக்கு எல்லாமும்மாக  இருந்தவர்கள் இன்று  எதுவுமாகவே இல்லாமல் போவது வாழ்க்கையின் வலிமையா இல்லை மாற்றத்தின் நிலையா.?

சமரசம் செய்யாத  உறவு ஏதுமுண்டா?

Actually, we have to remain some people at some times that we do have self respect.


சில பேர் நல்லாருக்கும் போதே போதையில் இருக்கா மாதிரி பேசுறானுங்க சில பேர் போதையில் இருக்கும் பொழுது ததான் கரைட்டா பேசுறாங்க.


தூய்மையான தோழமையென்றால் அதை ஆண்களிடம் மட்டுமே பெற முடியும்.பெண்களிடம் அது சாத்தியமில்லை. ஒரு துளியெனும் அதில் பொறாமையும், வஞ்சத்தையும் கலந்துவிடுவார்கள்.

எவ்வுளவு காலம்தான் வலிக்காத மாதிரியே நடிப்பது இந்த வாழ்க்கைகிட்ட.

பெண் எப்பொழும் தன்னை ஒர் உறவாக்க முற்படுவாள் சகோதிரி, தாய் என. ஆனால், ஆண்கள் பெரிதாக பெயர்கள்  எதுவும் தேடுவதில்லை எப்பொழுதும் ஒரு தோழமை உணர்வுடன்  இருப்பர்.

எங்கோ மனிதம் பிழைத்து இருக்குமாயின் அதுவும் கடவுள் மாதிரி கல்லாவே இருக்கு போலும்.

நிறைய புத்தகங்களை கண்களிலேயே விழிங்கிவிட  ஏங்குவது பேராசைதான் இருப்பினும் தடுக்க முடியவில்லை.

பெண்கள் தினம் கொண்டாடவும், வாழ்த்து சொல்லும் அளவிற்கும் உங்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கோம்ன்னு சொல்லுவானுங்க அவுங்களை மிதிங்க முதல்ல. # women's day


இரவில் சிலையை தாக்கிய கோழைகளுக்கு பகல்களை விரயம் ஆக்காதீர்கள்.#பெரியார்

There's no independent rat in front of the cat. #HappyWomensDay2018


வாழ்க்கை பல விஷயங்களை நமக்குத்  தரும் பொழுது  conditions applied  என்ற குறிப்போடுதான் தருகிறது நாம்தான் அதை  கவனியாமல் களத்தில் இறங்கிவிடுகிறோம்.

பொய்க்கு புனைவு எழுதுவதுதான் கவிஞர்களின் வேலை. #கவிதை


Don't argue and waste your time with the people. Who don't have content with their argument and their only aim is to win the argument.


Life is always giving you only one option that's 'Yes'.

ஒருவனும் ஒருத்தியும் சந்தோஷமாக இருக்கனும்ன்னா அந்த  ஒருவனும்,  ஒருத்தியும் கல்யாணம் பண்ணக்கூடாது. #டாக்டர்ஷாலினி

பெண்கள் எல்லாம் ஆஃப்பாயில் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு  உண்மை ஆண்கள்  தன்னை ஒரு ஹீரோவாக project  பண்ண முயல்வதும்.

பொய்யை புதுப்பித்துக்கொண்டே வருவதுதான் வாழ்க்கை .

நாம்பாட்டுக்கு எல்லைகளை கடந்து வாழலாம் என்று ஓடினால் பொடணியில் அடித்து திரும்பு என்கிறது வாழ்க்கை.

வாஞ்சையான வதை. #கலவி

யோசிப்பதற்குள் சில விஷயங்கள்  நடந்தேறிவிடுவதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம்.

பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகளே இல்லை என்னும்போது உறவுகள் சாத்தியமா.

சுயகௌரவம் என்பது வேறு சுயமரியாதை  என்பது வேறு. முதலாவது அதிகச்சுமை இரண்டாவது அடிப்படையான ஒன்று.

மனம் என்பது பருந்து போன்று உயரே பறந்து அலைந்துக்கொண்டு இருக்கும் தன் இரைக்காக.

எல்லா  உறவுகளுக்கும் அநாவசியமாக பெயர் தேடிக் கொண்டு இருக்காதீர்கள்.

எத்தனையோ அன்பின் முன்னால்
காலம் தோற்றுப்போய்யுள்ளது.

அன்பிற்கு நிரூபணங்கள்
தேவையில்லை
அர்ப்பணங்கள் போதும்.

ஒரு சில பாடல்கள் நமக்கு பிடித்தவரின் அன்பை அள்ளிக்கொண்டு வந்து தந்துவிடும்.

இசையால் வார்க்கப்பட்ட ஒரு சில உறவை வார்த்தைகளால் சொல்ல  இயலாது.

புனைவுகள்தான் எத்தனை அழகு, வாழ்க்கை போன்று.

வாழ்க்கை நமக்கனவே தேர்வு செய்து வெகு சிலரை அனுப்புகிறது. அவர்களை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில் இருக்கிறது நம் திறமை.

"காலத்தின் கட்டாயம்" என்பது நூறு சதவீகிதம் கல்யாணதிற்கே பொருந்தும்.

சில கதவுகள் தட்டாமலே திறக்கப்படும் ஓசையின் வழியே.

தொடக்கமே முடிவின் துவக்கப்பள்ளி.

தேக்கி வைத்துக்கொள்ளுங்கள் சில உறவுகளை சமயங்களில் நீந்த தேவைப்படும்.

மோடி சர்கார் என்பதை விட மோசடி சர்கார் என்பதே சரியான வாசிப்பு.

இங்கு  எழுத்துக்கும் பஞ்சமில்லை, எழுத்தாளர்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால்,  வாசகர்கள்தான் குறைவு.

காலத்திற்கு நேரமே போதவில்லை போலும் கடந்துக்கொண்டே இருக்கிறது.

தீர்வு என்று ஒன்றில்லை எல்லாமே தற்காலிக முடிவு அவ்வுளவே..

குற்ற உணர்ச்சியே வரமாட்டேங்குதே அப்படின்னு ஒரு  குற்ற உணர்வு.

காந்திகளை சுட்ட மக்களால் மோடிகளை தவிர்க்க முடியவில்லை. #GobackModi

நிஜம் கற்பனை விட பயங்கரமானது.


இளையராஜா இசையில் லயிக்கலாம். .ஏ ஆர் இசையில் திளைக்கலாம். .யுவன் இசையில்தான் வாழமுடியும். #YuvanForLife

மகத்தான பொய் என்பது உண்மையை விட சிறந்தது.

காதலிக்காமல் கல்யாணம் செய்து கொள்வது புனிதம் என்று பெருமைப்படும் அளவிற்கு சமூகம் முட்டாளாய் இருந்ததை நினைக்கும்பொழுதுதான்..

அழகான நேரத்தில் மிக அறிவான கேள்விகளும் முட்டாள்தனமானதே.

அழகு எப்படி அறிவை மங்கச்செய்வது இயல்போ அவ்வளவு இயல்பு அறிவு அழகை சிதைத்துவிடுவதும்.

Nowhere to go, life is a rat trap.

தப்புன்னு எதையும் கணிக்கவும் முடியலை ..சரின்னு எதையும் எற்கவும் முடியலை.

எல்லாருக்கும் நல்லவங்களா இருக்கனும்ன்னா நடிக்கத்தான் செய்யனும்.

நம்பிக்கையின் அளவுக்கோல்
என்பது பர்ஸிலிருந்து பணம் எடுத்து தருவதும் ..பர்ஸே நம்மிடம் தருவதற்கும் உள்ள வித்தியாசம்.

சாவை நோக்கி பயணிக்கும் வாழ்க்கையில்தான் எத்தனை நிபந்தனைகள்.

The height of democracy is admits corruption .

Everything it's doesn't matter until it matters.

இந்த 90's கிட்ஸ்தான் என்னடா பாவம் பண்ணோம்..அப்ப நாங்க Home work செய்யலனாலும் எங்களதான் கேட்டீங்க. இப்ப  இவங்க Home work செய்யலனாலும் எங்களதான் கேட்குறீங்க. 😐

வாழ்க்கை  ஒரு கேவலமான டிசைன்  அப்படின்னு திரும்ப திரும்ப நினைவுப்படுத்துகிறது.

'பணத்தை தண்ணியா செலவு பண்ணாத' என்ற காலத்திலிருந்து 'தண்ணீரை பார்த்து பணம் மாதிரி செலவு பண்ணுங்க'  காலத்திற்கு வந்து இருக்கிறோம்.

தான் புத்திசாலியாக தெரிய  உடன் நாலு முட்டாள்களை வைத்துக்கொள்ளுதல் போல்தான் சிலர் தன் மனைவியை தேடுகிறார்கள்.  நீ அழகாக  இருந்தால் மட்டும் போதும் யோசிக்க வேண்டாம்.

தெளிவான குழப்பம் வரும் போது. சரியா தப்பான முடிவு எடுத்துடுறோம்.

விருப்பமில்லாத விரும்பங்களை கருணையின்றி நிராகரிக்க தேவை இன்னொரு இதயம்.

பொய்க்கு தான்   அழகான முகம். .உண்மையின் முகம் விகாரமானது. அதை எதிர்க்கொள்ள ஒரு துணிவு வேண்டும்.

சிலர் பேர் பொய் பேசி பேசி கடைசியில்  உண்மை எதுன்னு அவங்களே குழம்பிடுறாங்க..

பொய்யான வாக்குறுதிகளே நம்பிக்கையின் அச்சாணியாக அமைவதுதான் நகை முரண்.

சில உணர்வுகளை உணர்ச்சி இன்றி  தேமே என்று கடத்த  ஆங்கில மொழி மிகச்சரியாக பயன்படுகிறது.

சுயபச்சா தாபம் வருகிற மாதிரி கேவலமான  உணர்வு வேறில்லை.

தன் பிள்ளைக்கு  அப்பா வேண்டும் என்பதாலே பெருவாரியான பெண்கள் தன் கணவரை சகித்துக் கொள்கிறார்கள்.

ஆண்களில் சில்லறைகள் கிடையாதுதான் பெண்கள் போல்.ஆனால், பெருஞ்சில்லறைகள் உண்டு.

ஆண்களின் மதி நுட்பம் பெண்களை கையாள்வதில் வெளிப்படும்.

அரசியல்ன்னா என்னனே தெரியாதுன்னு சொல்றவங்க பண்ற அரசியல்  இருக்கே.

பெண்களின் பெரும் கனவுகளை சல்லி சல்லியாக உடைப்பதே கல்யாணம்.

மாறுதலே நிஜம் மற்றவையெல்லாம் பொய்.

கட்டணமில்லா தேர்வுகள் வாழ்க்கையின் அனுபவங்கள்.

எல்லாருமே உண்மைக்கு
அருகேதான் இருக்கிறோம்.ஆனா,உண்மையை யாரும் பார்த்தது இல்ல.

பிடித்திருப்பதால் வானவில்லை உடுத்திக்கொள்ள முடியாது.

நேசத்தின் கரங்கள் சமயங்களில் கறை படிந்து இருக்கிறது.

பலி இடத்தில் நம்மையே வைத்துப் பார்த்தால்தான் அதன் வலி புரிகிறது.

முட்டாள்களுக்கு வெவ்வேறு பெயர்கள்  உண்டு.

காலம் தாழ்த்தாமல் கடக்கிறது காலம்.

எழுவதுவது அத்துணை சுலபமல்ல  வீழ்வதுப்போல். ஆனால்,  எழ வேண்டும்  என்பதுதான் நம் முன்னிருக்கும் சவால்.


எத்தனை ஆர்ப்பாட்டமான பகலாக இருந்தாலும் அநாவசியமாக விழுங்குகிறது ஓர் இரவு.

எதார்த்தமாக இருப்பதும் சமயங்களில் அத்துணை ஆபத்தானது.

எதோடும் சேராத மனநிலை காற்றில் பறக்கும் சருகேன மிதக்கிறது.

அன்பின் கதவுக்கும் கள்ளச் சாவிகள் உண்டு.

அனைத்து விஷயங்களிலும் தரவுகள்  எதிர்ப்பார்க்க முடியாது.

Saturday, May 5, 2018

பிறிதொரு காலம்

உன் எண்ணங்களில் விழுந்து
உன் வண்ணங்களில் கலந்து
உன் வாழ்க்கையில் நிலைக்கலானேன்

பிறிதொரு காலத்தில் உன்னை
பிரிந்த பொழுது
நினைத்துக் கூடப் பார்த்ததில்லை
உன்னைச் சேர்வேனென்று
நினைக்காத காரணத்தினால்
என்னவோ
நினைத்துக் கூட பார்க்க முடியாத எல்லாம்
நடந்தேறிவிட்டது

காலம் ஒரு கொடிய
மிருகம்  அனைத்தையும் விழுங்கி
ஏப்பம் விட்டபடி மெல்ல நகரும்
சற்றும் சலனமில்லாமல்.

Sunday, April 1, 2018

உறங்குவதற்கு முன்

உறங்குவதற்கு முன்

 ஏதோ ஒரு
துரோகம் நினைவுக்கு வருகிறது
 நாம் இழைத்ததாக இருக்கலாம்
 அல்லது நமக்கு இழைத்ததாக இருக்கலாம்

 ஏதோ ஒரு
 பெருங்கனவு வந்தமர்கிறது
அடைந்ததாக இருக்கலாம்
 அடையவிருப்பதாக இருக்கலாம்

 ஏதோ ஒரு
 அன்பு இழையோடுகிறது
 மீண்டதாக இருக்கலாம்
 மீளாததாக இருக்கலாம்

 ஏதோ ஒரு 
வன்மம் நிலைகொள்கிறது
நிகழ்ந்ததாக இருக்கலாம்
 நிகழப்போவதாக இருக்கலாம்

 ஏதோ ஒரு
சில உணர்வுகள் மேலோங்குகிறது 
அவை உறங்கும் முன்னதாகவும் இருக்கலாம்
 உறங்கிய பின்னாகவும் இருக்கலாம்.

Friday, March 30, 2018

வீரயுக நாயகன் வேள்பாரி

ஆனந்தவிகடனில் வரும் ஆர்வமாகப் படிக்கும்படியான ஒரே தொடர் வீரயுக நாயகன் வேள்பாரி பாரி மட்டுமே. சு. வெங்கடேசன் அதை எழுதிவருவதால் சொல் நடைக்கும், சுவாரஸ்யம் திற்கும் குறைவில்லை. வரலாற்றுப் பதிவில் அவர் கல்கியை நெருங்குகிறார் . இயற்கை பற்றி அறிய அறிய வியந்தது ஒருபக்கம் எனில். இத்தொடரின் நாயகன் வேள்பாரியின் மீது காதல் வருகிறது மறுபுறம். ஆதனியை இடம்பெயர்த்துவிடலாமா என்ற ஆவல் வந்துவிடுகிறது. அவனின் திறமையும், வீரத்தின் சான்றும் திக்குமுக்காடச்செய்கிறது .

  இயற்கை ஒரு கடல் எவ்வுளவு தூரம் வேண்டுமானாலும் நீந்தலாம் நாம்தான் அயர்ந்து போவோம் நம்மை எப்பொழுதும் வியப்பில் வைத்திருப்பதே அதன் இயல்பு. இலைகளும், கொடிகளும், ஒவ்வொரு மரங்களும் அதன் தன்மைகளும் படிக்கும் பொழுது கண்கள் விரிவதைத் தடுக்க இயலவில்லை. அதற்கு ஈடு கொடுத்தார்போல் விலங்குகளும் அவற்றின் தனித்துவங்களும் அறிய வேண்டிய ஒன்று.

 இத்தொடர் இப்பொழுது முடியும் தருவாயில் உள்ளது . முடிவதற்கு முன்பே இதைப்பற்றி எழுதத் தூண்டியது பாரியின் மேல் கொண்ட காதலால். பாரியை வீழ்த்திவிட்டனர் என்பதைப் படித்த பின் எழுத மனமுறாது அதை ஏற்கவும் முடியாதென்பதால் இப்பொழுதே எழுதலானேன். பார் போற்றும் கவிஞர் கபிலர் பேச்சற்றுப்போவார் பாரியின் முன்னால் இதில் புரிந்துகொள்ள லாம் பாரியின் ஆற்றலை. எண்ணிலடங்கா குலங்களை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் காத்துவந்துள்ளான். தலைமைப்பண்பு, மரியாதை, வீரம், காதல், அன்பு, நட்பு, குலச்செருக்கு என்று அனைத்திலும் சிறந்து விளங்கும் பாரியை காதலிக்காமல் இருக்க முடியாது ஆண்களாய் இருப்பினும். 

  இத்தொடரில் வரும் பெண்களும் மிகவும் வலிமையானவர்கள். .ஆதினி, அங்கவை, மயிலா, குலநாகினிகள் என்று ஒவ்வொரு பெண்ணின் ஆளுமைகளும் ஒருங்கே அமைந்திருக்கும். கொற்றவை குத்தும், ஆடுகளுங்களையும் கண் முன் நிறுத்தியிருக்கிறார் வெங்கடேசன். நீலன், உதிரன்,தேக்கன், வாரிக்கையன் என்று ஒவ்வொரு வரும் தனி சிறப்பு. கபிலருக்கும் பாரிக்கும் நடக்கும் உரையாடலில் சொல்லாற்றல் இன்பத்தில் லயிக்கலாம். வானவியல், கோள் அறிவு என்று அறிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உண்டு. 

 சேரன், சோழன் என்று மாமன்னர்கள் படையெடுத்து வந்தாலும் வீழ்த்த முடியாத பாரியை. குருமன்னர்கள், மாமன்னர்கள், வெளி தேச வணிகர்கள் யாராக இருப்பினும் அவர்கள் வாயிலிருந்து வெளிவரும் சொற்கள் 'பாரியா அவனை நெருங்க முடியாது' என்பதே. பாரியின் மற்றொரு கவசம் இயற்கையே அரணாகப் பச்சை மலைத்தொடர்.

 அப்படிப்பட்ட வீரனை சூழ்ச்சிகளின் மூலம் சாதகமான சூழ்நிலையையும் உருவாக்கி ஒரே நேரத்தில் சேரன், சோழன், பாண்டியன் என்று மூன்று மாமன்னர்களும் பாரியை சூழ்கின்றனர். பாரியைக் காதலிக்கும் என்னால் இதற்கு மேல் நடப்பவை விவரிக்க முடியாது என்பதாலே முடிவைப் படிக்கும் முன்பே எழுதிவிட்டேன். எப்படி இருப்பினும் பாரி ஒரு பார் போற்றும் வீரன் என்பதில் ஐயமில்லை. காலத்தின் சூழ்ச்சியில் பாரியும் தப்பவில்லை என்பது கசப்பான உண்மை. என்றும் என் நினைவிலிருந்து அகலாத காதலனாய் பாரி.

Monday, March 12, 2018

ஞாபகத்தீ



      எவ்வுளவு போர்த்திகொண்டாலும்
      குளிர்கிறது உன் ஞாபகத்தினால்..


       திசைகளற்ற கடலில்
       இருக்கிறேன் உனதன்பில்


       கண்கள் அயர்ந்தாலும்
       கனவுகள் அயர்வதில்லை
   
        பருகப் பருக
        வந்துகொண்டே இருக்கிறது
        உனதன்புச்சுரபி

         குளிர்கால வியர்வையாக
         வரும் உன் ஞாபகம்.

           மேகத்தை மறந்த வானமென
           திளைக்கிறேன்

         அறிவீனங்களின் ஆரம்பம்
         அன்பு பெருகுமிடம்.



         எண்ணாமல்விட்ட
         எண்ணங்களெல்லாம்
         பின்னால் துரத்துகின்றன.


         அகண்ட இருளில்
         ஒளிர்கிறது உன் ஞாபகத்தீ.
     
                                        தனிமைக்கும் உன்                                         
நினைவுகளுக்கும்
          என்றும் ஒரு தோழமையுண்டு
          என்னை உள்வாங்கிக்கொள்ள.

         வெட்கத்தை வெட்டி
         போர்வையில் முடிந்தேன்
     
          மோகத்தை போர்திக்கொண்டு
          போர்வையை விலக்கலானேன்.


           உன் முத்தபெருக்கில்
           என் உயிர் மூச்சுவாங்கியது
           இடைகால ஆசுவாசம்
            உன் அணைப்பு.


          விழி மூடி
          உயிர் திறந்து
          ஒரே சமயத்தில்
          மேகத்திலும், காடுகளிலும்
          பயணப்பட்டேன்.

          கலையாத கனவுகளின்
          திறவுகோல்
          உன் புன்னகை.

          சிரிக்க நினைத்து
         சிதைந்த தருணங்கள்
         ஞாபகத்தின் பெட்டகத்தில்
         கனவுகளை எதிர்கொண்டு.


        ஞாபகங்களைத் திறக்காதே
           பழைய நீ தெரிந்துவிடுவாய்.

          வடுகாய் உன் தடங்கள்
          என் மேனியெங்கும்
           உனதன்பு.


          ஏங்காத மேனியெல்லாம்
           கற்களால் ஆனது
         
            சரியான சரிவுகள்
             மீளாத இரவில்.


            முத்த முடிச்சுகள்
           அவிழ்க்கையில்
           மெத்தை மேகமாகிறது.


           பார்வைகளால் ஆடைகளை
           உருவி
           மேன்புன்னகையால் மெல்ல
           கலைத்தாய்

           கரங்களால் ஆகா கிளர்ச்சியை
           சொற்கள் தரவல்லது
           சற்றும் தலைக்கனமில்லாமல்.

        எழுதாத தாளெனக்காத்துகிடந்தேன்
                                      சிறிதும் இடமில்லாமல்                                   
நிரப்பிவிட்டாய்.


         கிடைக்காத நேரம்
         கிடைத்ததால்
         கிட்டாத அனுபவம்
         கிட்டியது.
         எட்டாத துரத்திலிருந்து.

       இரவுதான் எத்துணை
       கொடுமையானது
       உணர்வுகளை மேலிழுந்து
       உடலை வருத்துகிறது.


          உன் வாசனையை
         உட்கொள்ளும் தருணம்
         உனக்கானது.


          விடியாத விடியல்கள்
           கண்டதில்
           முடியாது இடைவெளி

          சேராத இரவெல்லாம்
          இரவென்று யார்
         சொன்னது?
     

         


           



       

               






         
         


Friday, March 9, 2018

அதிபுத்திசாலிகளுக்கான பதிவு


அதிபுத்திசாலிகள் கேட்கும் கேள்வி பெரியாரே சிலை வைக்கும் முறையை எதிர்த்தார் , பிறகு ஏன் அவர் சிலையை அகற்றக்கூடாது என்பதே. இங்கு ஒன்றை நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் சிலை வழிபடுதல் வேறு சிலையாக இருப்பவரின் வழி நடப்பது என்பது வேறு. மரியாதை நிமித்தமாகவும், நினைவுக்காகவும் சிலை வைப்பது இதில் அடங்காது. உதாரணத்திற்கு நம் வீட்டில் மறைந்த பெரியவர்களின் புகைப்படத்தை நாம் வைத்துக்கொள்ளுதல் போல்தான் இதுவும். அப்படியே இருப்பினும் இப்பொழுது சிலை வைக்கச் சொல்லி யாரும் வலியுறுத்தவில்லை இருப்பதைச் சேதப்படுத்த வேண்டாம் என்பதே அனைவரது விருப்பமும். இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் சுயநலத்திற்காக பாடுபட்டு வாழ்ந்தவர்களுக்கு எல்லாம் சிலை இருக்கும் இத்தேசத்தில் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவருக்கு சிலை இருப்பதில் தவறேதுமில்லை. 

இங்குத் தோழர் ஒருவரின் பதிவு நினைவுக்கு வருகிறது 'பெரியாரை பழமைவாதி என்று சொல்ல இன்னும் சில நூற்றாண்டுகள் தேவை' .

கடவுள் எதிர்ப்பார்பாளர்க்கும் , கடவுள்  மறுப்பார்களுக்கும் வித்தியாசம்  உண்டு. நாத்திகத்துக்கும் பகுத்தறிவுக்கும் வித்தியாசம் உண்டு. காந்திக்கும் கோட்சேவுக்கும் உள்ள வித்தியாசம் போன்று.

Thursday, March 1, 2018

பசி

பசி ஒரு கொடூரமான
மனிதன் இங்கு விலங்கு என்று
விளித்தால் அவை கண்டனம் தெரிவிக்கும்

அப்பசி ஒன்றையும்
விடுவதில்லை சுவாசிக்கும் காற்றைக்
கூட யாசகம் கேட்க வைக்கும்

எவ்வளவு இரத்தத்தை
குடித்தாலும் அதன்
தாகம் தணிவதேயில்லை
கடல் நீர் போல்
ஆர்ப்பரித்துக் கொண்டேயிருக்கும்

கதறல்கள் எல்லாம்
ஆனந்த இசை ஆயின
மழலைகளை பூச்சிகள்
போல் நசுக்கின

எண்ணிலடங்கா மொட்டுகளை வரிசைப்படுத்தி தன்
சுய இன்பத்தை வெளிப்படுத்தியது அக்கோரப்பசி

மனிதம் என்ற சொல்
அகராதியிலிருந்து
கிழித்தாகிவிட்டது

இரத்தம் தோய்ந்த யோனிகள் பழகிவிட்டன
தேனீர் கோப்பைப்போல்

மனிதம் மரித்து
அதன் மேல் படர்ந்துள்ள
கொடியை
வேடிக்கை பார்த்துக் கொண்டியிருக்கிறோம்
சற்றும் தயங்காமல்.

Wednesday, February 14, 2018

அத்தருணம்

ஆனந்தமான இசை
எரிச்சலூட்டும் சத்தமாக
ஒலிக்கும் அத்தருணம்

மழலை பேச்சும்
சலித்துப்போகும் அத்தருணம்

விருப்பப்பட்ட உடை
வெறுப்பாக மாறும் அத்தருணம்

அழகிய கவிதை
வெளியில் எறியாத குப்பையாக
தோன்றும் அத்தருணம்

ஏதோ ஓர் ஊழ்
தண்ணீரில்லா
ஆழ் கிணற்றில் என்னை
தள்ளிவிட்டு மேலிருந்து
பார்த்து சிரிக்கும் அத்தருணம்
ஆயிரம் மரண வலியில்
உயிர் வாழ்ந்துக்
கொண்டுயிருப்பேன். 

Tuesday, February 6, 2018

MAA

ஆகச்சிறந்த தாய்மைக்கான குறும்படம் #Maa .. அவசியம் வளர் இளம் குழந்தைகளின் பெற்றோர்கள் காண வேண்டிய படம். இதில் கோபப்படவோ, அருவெறுக்கவோ, உணர்ச்சிவசப்படவோ ஒன்றுமில்லை. இதை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில் இருக்கு நம் பக்குவம்.பிள்ளைகளுக்கு புரிதலை கொண்டு வருவது பெற்றோரின் கடமை. நாமும் இப்பருவத்தை கடந்தே வந்திருப்போம். 


முதலில் ஒரு சாதாரண அன்னையின் மனநிலை பிரதிபலித்து பின்பு அதிலிருந்து வெளிவருவது ஒரு அழுத்தமான அழகியல். வசனங்களும் அருமை. ‘பயத்தோடும், வெறுப்போடும் ஓர் உயிரை இந்த உலகத்துக்கு கொண்டு வரக்கூடாது’ போன்ற வசனங்கள் இன்னும் மெருகூட்டுகிறது. 


கிளைமாக்ஸில் அந்த அம்மா ‘இரண்டு பேரும் சேர்த்துத்தான் தப்புபண்ணீங்க ஆனா, அவன் எந்த பாதிப்பும் இல்லாம இயல்பா இருக்கான் . நீ மட்டும் ஏன்? பாதிப்பு அனுபவித்தது நீ. ஆனா, மீண்டு வந்துட்ட போ’ என்பது சிறப்பான வசனம். #Maa


கீழிருக்கும் இணைப்பில் அப்படத்தை காணலாம். 

https://youtu.be/-lKk_5qYdkk

Tuesday, January 9, 2018

முத்தம்

 திகட்டாத முத்தம் என்பது

தரப்படாத முத்தம்.


முத்தத்தின் ஆழம்பார்க்க சென்று
முழுவதுமாக விழுந்துவிடுவதெல்லாம்
இன்ப வலிகள். 


குழந்தைகளிடம் தீரா பசியாக
எப்பொழுதும் இருந்துக்கொண்டே
இருக்கும் ஓர் முத்தமெனும்.

உலகத்தையே இலகுவாக்கித்தரும்
குழந்தையின் ஒற்றை முத்தம்.

முத்தப்பெருவெளியில்
மொத்தமாக தொலைந்து 
போதல் ஓர் அலாதி. 

முத்த முடிச்சுகள் அவிழ்க்கையில்
உயிர் பிணைந்து போகும்.

கணவன் மனைவியின்
நெற்றியில்  கொடுக்கப்படும்
முத்தம் காமமற்றது.

அன்பை தெரியப்படுத்துதல் 
ஒரு வழி முத்தத்தின் ‘வாயி’லாக.

ஆதாமின் காதலும்
ஒரு முத்தத்திலிருந்தே
தொடங்கி இருக்கும்.

உதட்டில் பெறப்படும் முத்ததில்
சற்றும் சளைத்தல்ல
கன்னத்தில் பெறப்படும் 
முத்தம் தொடக்கப்புள்ளியில்.

சொல்லாத காதலை ஒரு
முத்தம் உணர்த்தும்.
அறியாத காமத்தை ஒரு
முத்தம் வெளிக்கொணறும்.

முதலும் முடிவும் முத்தமே.

முத்தத்தை ஆடையாக
தரிக்கையில் 
வெட்கம் போர்வைக்குள்
உறங்கும்.

என்னை எடுத்துக்கொண்டு
உன்னை தருகிறாய் 
ஒற்றை முத்தத்தில். 

விலகாத பார்வை உனது
எதிர்க்கொள்ள முடியாமல்
விழி முடி உன்னை 
விழுங்குகிறேன்
முத்தத்தில்.