அறம் என்ற புத்தகம் ஜெயமோகன் எழுதிய உண்மை மனிதர்களின் கதைகள். வாழ்க்கையை அறையும். ஒவ்வொரு கதை படித்த பின்னும் அதிலிருந்து மீள்வது ஓர் சவால்.
அதில் வரும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை ஓட்டமும். இந்த உலகம் அவனை இட்டு செல்லும் தூரமும் அப்படமாக வடித்தியிருப்பார். உண்மையில் ஓர் கதை படித்தால் ஒருநாள் எனும் இடைவெளி வேண்டும் அடுத்ததை தொட துணிந்து பாருங்கள் என்பதைப்போன்று இருக்கும்.
அந்த புத்தகத்தில் வரும் கதைகள் பெரும்பாலும் திருவனந்தபுரம், கன்னியாகுமாரி, நாகர் கோயில் சுற்றுவட்டாரங்களை ஒட்டியது. அந்த அழகிய தமிழ் என்னை மிகவும் பற்றியது. சரியாக சொல்லவேண்டுமெனில் "தாயாளி" என்னை அதற்கு ரசிகையாக மாற்றிவிட்டார் இந்த ஜெயமோ.
எவ்வுளவு சாதி பிரிவுகள் எப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதையும், எப்படியெல்லாம் அடிமைப்பட்டுகிடந்தனர் என்பதையும் விவரித்துயிருப்பார். நாயாடிகள் என்ற சாதியை பற்றிய உண்மைகள் என்னை கலங்கடிக்கச்செய்தன. "அலைந்து திரியும் குறவர்களின் ஓர் பிரிவு. இவர்களை பார்த்தாலே தீட்டு என்ற நம்பிக்கை இருந்தமையால் இவர்கள் பகலில் நடமாட முடியாது" 'நூறு நாற்களில்' என்ற கதையில்.
அய்யர், நாடார், நாடர்களின் உட்பிரிவுகள்,பிள்ளைவாள், கோட்டி இப்படி எண்ணற்ற சாதி பிரிவினைகளின் தர்கங்களும், தரவுகளும் பதியப்பட்டுள்ளது. "உடம்பில் வயிறு தவிர வேறு உறுப்பிருக்கிறது என்ற நினைப்பே இல்லாத வாழ்க்கை. கோபமே அடங்காத துர்தேவதை மாதிரி வயிறு பொங்கிக்கொண்டே இருக்கும். கூரைக்குப் பிடித்த தீ போன்றது பசி" 'வணங்கான்' என்ற கதையிலிருந்து.
இப்படி சொல்வதாய் இருந்தால் நான் திரும்பவும் அந்த புத்தகத்தையேதான் மறுபதிப்பகம் செய்யவேண்டும்.இருந்தும் எதற்கு உரைத்தேன்யென்றால் உங்களுக்கு ஓர் புரிதல்காகதான்.இந்நூலில் அவர் உரையாடிய உறவுக்கொண்ட எழுத்தாளர்களும் அவர்களின் வாழ்க்கைமுறையும் இரு வேறு கதைகளில் வருகிறது. எழுத்தாளர்களின் உரையாடலில் வரும் இலக்கியமும், கவிதையும், சொல் நயமும் அமுதுறச்செய்யும்.
ஒரு சில விஷயங்கள் வியப்பில் ஆழ்த்தும் பிறகு அது பழகிவிடும் அளவிற்கானது இப்புத்தகம். என்னை அதிகம் பாதித்துயிருக்கிறதா இல்லை அதிக பாத்திருப்புக்குள்ளாக்கும் புத்தம்தானா என்பது நீங்கள் படித்து உணரவேண்டியது. 'யானை டாக்டர்' ஓர் அருமையான அனுபவம் யானைகளின் மேல் நடந்ததை போன்ற உணர்வு அதிலும் டாக்டர் கே என்கின்ற கிருஷ்ணமூர்த்தி அருமையான மனிதர் யானையையே வென்றவர்.
'ஓலைச்சிலுவை' என்ற கதையில் நம் நாட்டில் கிருத்துவம் நுழைந்த விதமும் டாக்டர்
சாமர்வேல் என்ற அற்புதமான மனிதரின் அற்பணைப்பும் திறம்பட கையாண்டுயிருக்கிறார்.எளிய மனிதர்களின் வாழ்க்கை முறைகளை கண்முன் நிறுத்தி அதிரவைக்கிறார்.'கோட்டி' என்ற கதையில் பூமேடை என்கின்ற தனி மனிதர் தன்னலம் இன்றி இறுதிவரை அடுத்தவருக்காக வாழ்ந்து தன் அனைத்து சொத்துக்களையும் இழந்தவர். சுதந்திர போராட்ட தியாகியும் கூட எதற்கு அஞ்சியும் வாழாமல் தனியாகவே போராட்டங்களை நடந்தியவர்.ஒரு தனி மனிதனால் என்ன செய்யமுடியும் என்ற எண்ணத்தை மாற்றியவர்.
அதேப்போன்று காரி டேவிஸ் என்பவர் உலகப்போரில் விமானமோட்டியாக இருந்து அதில் நிகழ்ந்த அழிவுகளை எண்ணி தன்னுள் மனம் வெதும்பி அதிலிருந்து வெளியே வந்தார். அப்படி வந்தவர் ஒரே உலகம் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தை முன்நிறுத்த தனியாகவே பாடுபட்டு தனக்கென்னு எந்த நாடும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் போராடி உலகக்குடிமகனுக்கான பாஸ்போர்ட் ஒன்றை பெற்றார். தன்னை அமேரிக்க குடிமகன் என்பதிலிருந்து விடுவித்துக்கொண்டார். 'உலகம் யாவையும்' என்ற கதையில் இவரைப்பற்றி படிக்கலாம்.
இந்த புத்தக்கத்தைப் பற்றி நான் எழுதியிருப்பது விமர்சனம் அல்ல எனில் எனக்கு அந்த தகுதி இல்லை. இது அந்த புத்தக்கத்தில் எனக்கு உண்டான அனுபவம். இதைப்படித்து உங்களை அப்புத்தகம் படிக்க தூண்டினால் அதை என் வெறியாக கருதுவேன்.நன்றி.
இந்த புத்தக்கத்தில் வரும் ஆளுமைகள்.
டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி (யானை டாக்டர்) 1923 - 2003
மார்சல் ஏ.நேசமணி (வணங்கான்) 1895 - 1968
தியோடர் ஹோவார்ட் சாமர்வெல் (ஓலைச்சிலுவை) 1890 - 1975
'பூமேடை' எஸ்.ராமைய்யா (கோட்டி) 1924 - 1996
கோமல் சுவாமிநாதன் (பெருவலி) 1935 -1995
காரி டேவிஸ் (உலகம் யாவையும்) 1921- 2013